ரோம், ஜூலை 21- பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி வியாழனன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், பிரதமருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, நாடாளு மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இதனைக் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. அதேவேளையில், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று மரியா டிராகி கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் வியாழனன்று அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மரியா டிராகி ராஜினாமாவை ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா நிராகரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தாலியில் மூன்றாவது அரசாங்கம் பதவி விலகுவதைத் தவிர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக டிராகி நாடாளு மன்றத்தில் உரையாற்ற வேண்டுமென செர்ஜியோ மட்டரெல்லா வியாழனன்று கேட்டுக்கொண்டார். பிரதமர் மரியா டிராகிக்கு பெரும்பான்மை இருந்தாலும் அவர் ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளார். அவரது முடிவு உறுதியானால் டிராகி தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தினால், மட்டரெல்லா அவரை இடைக்காலப் பிரதமராக நீடிக்கச் சொல்வார். எவ்வாறாயினும் செப்டம்பர் இறுதிக்குள் இத்தாலி யில் தேர்தல் நடைபெறுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் வியாழன் மாலை பிரதமர் மரியா டிராகி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.