world

img

பணமோசடி விஜய் மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்... வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்....

லண்டன்:
ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப் பண மோசடியில் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய இந்திய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ள  இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்‌ஷன்வர்தன் ஷ்ரிங்கபாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி இங்கிலாந்து தரப்பு செயல்படுவதை புரிந்துகொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது செயல்பாட்டில் இருந்து வருகிறது. நாங்கள் சிறப்பாகவழக்குகளை தொடங்கி உள்ளோம். மேலும் இங்கிலாந்திடமிருந்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக சிறந்த உத்தரவாதம் வந்துள்ளது. அதனால் அவர் இந்தியா கொண்டு வரப்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

;