world

img

வருங்காலத்தில் தொற்றுநோய்களை தடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை... ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு....

லண்டன்:
வருங்காலத்தில் தொற்றுநோய்களை தடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை என்று ஜி-7 மாநாட்டில்  பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஜி- 7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடுஇங்கிலாந்து நாட்டின்  கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள கார்பில்பே பகுதியில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி மற்றும் ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா கலந்து கொண்டுள்ளனர்.இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர காணொலிக்காட்சி மூலம் பேசியதாவது:கொரோனா பெருந்தொற்றை இந்தியாஒட்டுமொத்த சமூகமாக இணைந்து எதிர்கொண்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், தடுப்பூசிகளை நிர்வகிக்கும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. உலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். அதற்கு,ஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதாரஅணுகுமுறை தேவை. இனிவருங்காலத்தில் இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும். இதில் வெளிப்படையான ஜனநாயக சமூகங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது.

கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்யவும், கொரோனா பரவலை தடுத்து சிகிச்சையளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங் களுக்கு வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்கவும் உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா பரிந்துரைத்துள்ளது. இந்தப்பரிந்துரைகளுக்கு ஜி7 நாடுகள் ஆதர வளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

;