ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. சுமார் 82 லட்சத்து 50 ஆயிரம் பேர் உணவு உதவியை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவிலான உதவிகள் நெருக்கடியைத் தீர்க்குமளவுக்கு வரவில்லை. மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அறிவிக்கப்படாத பயணத்தை சோமாலியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மேற்கொண்டிருக்கிறார்.