world

img

ஆப்கானிஸ்தானி்ல் அமெரிக்கா ‘‘ட்ரோன் தாக்குதல்’’

காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்களுக்கு முன் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கேகுழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல்நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே வியாழக்கிழமை நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர், 2 பிரிட்டன் நாட்டவர் மற்றும் ஒரு பிரிட்டன்குழந்தை உள்பட சுமார் 170 பேர் கொல்லப்பட்டனர். நாட்டை விட்டு வெளியேற விரும்பிய டஜன் கணக்கான ஆப்கானியர்களும் இதில் அடக்கம். இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐஎஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஐஎஸ்-கே அறிவித்தது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைதாலிபன்கள் கைப்பற்றிய நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் இருந்துவிமானம் மூலம் வெளியேறி வருகின்றனர். இந்த விமான நிலையம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஐஎஸ்-கே என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட்- கோரோசான் அமைப்பின் பல்லாயிரம் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் காபூலுக்கு கிழக்கே அமைந்துள்ள நங்கஹார் மாகாணத்தில்தான் ஒளிந்திருப்பதாக நம்பப்படுகிறது. இதையடுத்து அங்கு அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆயினும் பொதுமக்கள்யாரும் இறந்ததாக தெரியவில்லை என்றும்கூறியுள்ளது.விமான நிலையத்துக்கு எதிராக இன்னமும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக‘‘குறிப்பான, நம்பகமான’’ தகவல்கள் இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.”எதிர்காலத் தாக்குதல் முயற்சிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிச்சயமாக தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

;