சியோல், ஜூலை 27- கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் தென் கொரியத் தலைநகர் சியோலில் ஆயிரக்கணக் கான மக்கள் ஊர்வலமாக வலம் வந்தனர். 1950 முதல் 1953 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போர் நிறைவுக்கு வந்து 70 ஆண்டுகள் ஆனதை அனுசரிக்கும் வகையில் பல்வேறு தென் கொரிய அமைப்புகள் நிகழ்வு களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அதில் அமைதிக்கான பேரணியும் ஒன்றாகும். இந்த அமைப்புகளின் அழைப்பை ஏற்று ஆயிரக் கணக்கான மக்கள் ‘அமைதி வேண்டும்’ என்று கோரிக்கைகளை எழுப்பியவாறு பேரணியில் பங்கேற்றனர். வடகொரியாவுடனான மோதல் போக்கைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மூலமாக கொரிய தீபகற்பம் சந்திக்கும் பிரச்சனை களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமைதி ஆர்வலர்கள் கோரி வருகிறார்கள். பதற்றங் களைத் தீர்க்க பேச்சுவார்த்தையே சரியான வழி என்று பேரணியின் நிறைவாக நடந்த கூட்டத்தில் பேசிய அமைப்புகளின் நிர்வாகிகள் உறுதி யாகத் தெரிவித்தார்கள். “மோதல்களை நிறுத்திவிட்டு இப்போது அமைதியை நோக்கிச் செல்லுங்கள்”, “அமெரிக்க-தென் கொரிய போர்ப்பயிற்சிகளை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கான கதவு களைத் திறந்து விடுங்கள்” மற்றும் “அமெரிக்க - தென் கொரிய-ஜப்பான் ராணுவ ஒத்துழைப்பு க்கு முடிவு கட்டுக” என்று எழுதப்பட்ட பதாகை களை ஏந்தியவாறு மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். அதிரச் செய்யும் வகையில் முழக்கங்களையும் எழுப்பினர். கொரிய அமைதி கோரும் அமைப்பு இந்தப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அமைப்பு பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து நிற்கும் ஒரு மேடையாக இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் உள்ள போர் எதிர்ப்பு அமைப்புகளும் தென் கொரியாவின் அமைதிக் கோரிக்கைக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கின்றன.
ஜூலை 27
1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி யன்றுதான் வடகொரியாவுக்கும், தென் கொரி யாவிற்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தாலும், சண்டை ஏற்படவில்லை. போர் மூள்வதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்தாலும் இருதரப்பும் போரில் ஈடுபடவில்லை. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரிய தீபகற்பத்தை பதற்றமான நிலை யிலேயே வைப்பதற்கு அமெரிக்கா முனைந்து நிற்கிறது. அணு ஆயுதங்கள் தாங்கிய இரண்டு நீர்மூழ்கிப் போர்க்கப்பல்கள் தென் கொரியா விற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தொடர்ந்து போர்ப்பயிற்சிகளில் அமெரிக்க மற்றும் தென் கொரிய ராணுவங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தூண்டுதல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும் என்றும் தென் கொரிய மக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். அவர்களைத் திரட்டி வரும் அமைப்புகள் ஜப்பானிடமும், தனது அமைதிக்கான கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.