world

img

ஈக்வடாரில் உள்நாட்டு ஆயுத மோதல்

கிட்டோ,ஜன.10- ஈக்வடாரில்  போதைப்  பொருட்கள் கடத்தல் கும்பல்களால்  உள்நாட்டு ஆயுத மோதல் உருவாகி யுள்ளது.  இதை தேசிய அவசரநிலையாக  அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இக்கும்பல்களின்  தொடர்ச்சியான தாக்குதல்க ளில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஈக்வடாரின் மிகப்பெரிய போதைக் கும்பலின் தலைவன்  ஃபிட்டோ என்ற ஜோஸ் அடோல்போ மசியாஸ் தப்பித்ததைத் தொடர்ந்து இந்த உள் நாட்டு ஆயுத மோதல் உருவாகியுள்ளது.  

அந்நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா  60 நாட்களுக்கு  அவசர நிலையும் இரவு நேர ஊரடங்கு உத்தர வையும்  அறிவித்துள்ளார்.  நாட்டின் பல நகரங்களில் கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், கொலைகள், பழி வாங்கும் நடவடிக்கைகளையும் ஆயுதக் கும்பல் கள் கட்டவிழ்த்துள்ளன.

பல போலீஸ் அதிகாரிக ளை பணயக்கைதிகளாக பிடித்து  படுகொலை செய்த காணொலிகளும் வெளியாகியுள்ளன . வன் முறையில் பல காவல்துறை வாகனங்கள் எரிக்கப் பட்டுள்ளன.மேலும் மொத்த  நாட்டையும் இந்த கடத்தல் கும்பல்களின் வன்முறைகள் சூழ்ந்துள் ளது. பல நகரங்களில் குண்டு வெடிப்புகளையும் அக்கும்பல்  நடத்தி வருகிறது.  இந்நிலையில் அரசு தொலைக்காட்சி நிறு வனத்திற்குள் நவீன துப்பாக்கிகளுடன்  புகுந்த  கும்பல்  பயங்கர தாக்குதலை நடத்திய காணொலி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யது.அதனை தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்த 13 நபர்களை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

ஈக்வடாரின் மிகப்பெரிய கடலோர நகரமான குவாயாகில், போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக நாட்டின் மிகவும் ஆபத்தான பகுதியாக  உள்ளது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் கடத்தப்படும் கோகெயின் போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய பகுதியாக  ஈக்வடார் மாறியதிலிருந்து இந்த கடத்தல் கும்பல்களின் வன்முறை அந்நாட்டில் பெரும் பாதிப்புகளையும் அமைதியற்ற சூழலையும்  ஏற்படுத்தி வருகிறது.கடந்த ஆண்டு மட்டும்  200 டன் போதைப்பொருள் அந்நாட்டில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டில் மாட்டும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களால் நாடு முழுவதும்   8,008 கொலைகள் செய்யப்பட்டுள்ளன. இது 2022 ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கையான 4,500ஐ விட இரண்டு மடங்கு அதிகம். 2018 உடன் ஒப்பிட்டால்  2022 வரை  இந்த கும்பல்களின் கொலைகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.இது போன்ற மோசமான பாதுகாப்பற்ற சூழல்  நாட்டின்  பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்து வருகிறது.