world

img

நெருக்கடியில் தனிப்பெண்கள்

டோக்கியோ, பிப்.11- ஜப்பானில் நடுத்தர வயதுடைய தனிப்பெண்கள் தங்கள் தேவை களைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று மாதர் அமைப்புகள் சேக ரித்துள்ள விபரங்கள் அம்பலப் படுத்தியுள்ளன. பல்வேறு காரணங்களால் தனித்து விடப்படும் பெண்கள் சமூகத்தில் பல்வேறு நெருக்கடி களை எதிர்கொள்கிறார்கள்.  ஜப்பானின் ஒட்டுமொத்த சமூ கத்தில் திருமணம் பற்றி எதிர்மறைக் கருத்தே தனியாக வாழ்வதற்கு வழிவகுத்துள்ளது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தனியாகத் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 14 ஆயிரம் திருமணங் கள் மட்டுமே பதிவாகின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் 2021 ஆம் ஆண்டில் பதிவானவைதான் மிகக் குறைவிலான எண்ணிக்கை யாகும். 1970 ஆம் ஆண்டில் 10 லட்சத்து  29 ஆயிரம் திருமணங்கள் பதிவா கின. அதே ஆண்டில் 50 வயதை எட்டிய ஆண்களில் 1.7 விழுக்காட்டி னரும், பெண்களில் 3.3 விழுக் காட்டினரும் திருமணமாகாமல் இருந்தனர். 2020 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்க ளின்படி, 50 வயதை எட்டிய ஆண்க ளில் 28.3 விழுக்காட்டினரும், பெண்களில் 17.8 விழுக்காட்டினரும் திருமணமாகாமல் இருந்தனர். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், தங்களுக்குத் திரு மணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்று 26.5 விழுக் காடு ஆண்களும், 25.4 விழுக்காடு பெண்களும் தெரிவித்திருக்கி றார்கள்.

பெண்களைப் பொறுத்தவரை யில், திருமணம் செய்து கொண்டால் கூடுதல் சுமையாக மாறிவிடும் என்ற அச்சத்தைக் கூறியுள்ளனர். தங்கள் வேலை, வீட்டுப் பணிகள், குழந்தைகளை வளர்ப்பது மற்றும் வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்வது என்று அனைத்து வேலை களும் தங்கள் மீதே விழுவதால் திருமணம் செய்வது கொள்வதைப் பற்றி எதிர்மறை எண்ணம் கொண்ட வர்களாக அவர்கள் இருக்கிறார் கள். ஆண்கள் தரப்பில், நிலையற்ற  வேலை மற்றும் திருமண வாழ்க்கையை சமாளிக்கும் அள வுக்கு போதிய வருமானத்தை ஈட்ட முடியாத நிலை ஆகிய கார ணங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

பெண்கள் நிலை படுமோசம்

கூடுதல் சுமையைத் தாங்க முடியாமல் தனியாக வாழும் பெண்களுக்கு தனியாக வாழ்வதே சுமையாக மாறியிருக்கிறது. தங்கள் பிரச்சனைகளைத் தொடர்ந்து பல்வேறு மாதர் அமைப்புகள் எழுப்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக, நடுத்தர வயதுப் பெண்களின் பிரச்சனைகளை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையோடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். அக்கட்சி யின் பாலின சமத்துவ ஆணை யத்தலைவர் குர்பயாஷி அகிகோ, மாதர் சங்கங்களின் தலை வர்களைச் சந்தித்துப் பேசி யுள்ளார். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்க ளின் நிலை குறித்து அவர்களின் விவாதம் இருந்தது. இந்த அமைப்பினர் நடத்திய ஆய்வின் படி, தனிப்பெண்களில் 70 விழுக் காட்டினருக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. அதில் 60 விழுக்காட் டினரோ, வீட்டு வாடகையைச் செலுத்திய பின்னால், பெரும் பண நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்று குறிப்பிட் டுள்ளனர்.  ஆய்வு செய்யப்பட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் வாடிக் கொண்டி ருக்கின்றனர்.

தனிப்பெண்களில் பெரும்பா லான பெண்கள் நிரந்தர வேலை யில் இல்லை என்று தெரிவித்த மாதர் சங்கங்களின் பிரதிநிதியான ஓயா சயோகோ, “பெரும்பாலான பெண்களுக்கும் ஆலோசனை மையங்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை. முதுமைக் காலத் தில் சிறிய அளவிலான ஓய்வூதி யம் மட்டுமே இவர்களுக்குக் கிடைக்கும். வறுமையின் பிடியில் இவர்கள் சிக்கும் ஆபத்து இருக்கி றது. ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் இடையிலான ஊதிய இடைவெளியைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை ஓய்வூதியத்தை அதி கரிக்க வேண்டும்” என்று வலி யுறுத்தினார். அனைத்துப் பிரச்சனைக ளையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாகவும், பெண்களின் கவுரவம் காப்பாற் றப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள் வோம் என்றும் ஜப்பான் கம்யூ னிஸ்ட் கட்சியின் குர்பயாஷி தெரி வித்தார்.