world

img

அமெரிக்காவில் 4 இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸில் 4 இந்திய பெண்கள் மீது அமெரிக்க பெண் இனவெறி தாக்குதல்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸில் 4 இந்திய பெண்கள் இரவு உணவை முடித்துவிட்டு, உணவகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் நின்றுகொண்டு இருந்தபோது, மெக்சிகோ அமெரிக்கப் பெண் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த பெண் இந்திய பெண்களை பார்த்து, ”இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இந்தியர்கள், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர். எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் வாழ்வது சிறப்பென்றால், எதற்காக இங்கே வருகிறீர்கள். நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்” என்று கூறுகிறார். மேலும், இந்திய பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணை போலீசார் விரைந்து வந்து கைது செய்தனர்.
 

;