ஆகஸ்ட் 9 அன்று பசிபிக் மகா சமுத்தி ரத்தில் உள்ள ஹவாய் தீவு பேரழிவைச் சந்தித்தது. அன்று அந்த தீவு நாட்டில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ இரண்டு பெரிய நகரங்களை கபளீகரம் செய்ததால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் குடும்பத்தினரை, வீடுகளை, உடமைகளை, வர்த்தகத்தை, இழந்துள்ளனர். இந்த தீ ஏற்பட்டதற்கு முதல் காரணம், கடந்த ஒரு மாத காலமாக அங்கு நிலவிய வறட்சி. நகரங்களைச் சுற்றியுள்ள பசுமைப் பிரதேசங்கள் காய்ந்து இருந்துள்ளன. அன்றைய தினம், பசிபிக் பெருங்கடல் பகுதியில் தோன்றும் சூறாவளியான (ஹரிக்கேன்) “டோரா” ஹவாய் தீவை தாக்கியது.
சூறாவளியால் பரவிய காட்டுத்தீ
அந்த சூறாவளியின் வெளிச்சுற்று பகுதி யில், காற்று வேகம் 72 மைல்(கிட்டத்தட்ட 115கி.மீ.).இதன் காரணமாக காட்டில் ஏற்பட்ட தீ வெகு வேகமாக நகரப்பகுதிக்கு பரவியதாக முதலில் வந்த செய்திகள் தெரி வித்தன. தற்போது வரும் செய்திகள், தீ ஏற்பட்ட தற்கான காரணம், சூறாவளி தாக்குவது தெரிந்திருந்தும், அந்த நகரத்தில் அதிக மின்அழுத்த மின்சாரம் நிறுத்தப்படவில்லை. ஆகவே, மின்சாரத்தினால் ஏற்பட்ட பொறி, காய்ந்த மரங்களில் பற்றியதால், தீ நகரப் பகுதியில் பரவியது. சூறாவளிப் புயல் காட்டுத்தீயை நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் நக ரத்தில் பரப்பியது. நகரப்பகுதிகளில் தீ பரவிய போது அது ஒரு நிமிடத்திற்கு ஒரு கி.மீ. என்ற வேகத்தில் பரவியுள்ளது. (அங்கு வீடுகள் 80 சதவீதத்திற்கு மேல் மரத்தால் ஆனவை)
காப்பாற்றத் தவறிய அரசு அமைப்புகள்
தீ தொடங்கியதும், நகரின் 82 இடங்களில் வைக்கப்பட்டுள்ள அபாயச் சங்கு ஒலிக்கப் பட்டிருந்தால், பலர் பாதுகாப்பாக தப்பி யிருக்க முடியும். பொருட்சேதம் மட்டும் ஏற்பட்டிருக்கும். தற்போது எந்த காரணத் தினால் யாரும் அந்த மணியை அடிக்க வில்லை என்பதற்கான விசாரணை தொடங்கி யுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் நகரத்தில் தீ பரவத் தொடங்கியவுடன், உடல்வலு இருப்பவர்கள் ஓடி உயிர் பிழைத்தனர். தீயணைப்புத் துறையோ அல்லது இராணுவம், கப்பற்படை, விமானப்படை பணியாளர்களோ யாரும் மக்களை இந்தத் பெருந்தீவிபத்திலிருந்து காப்பாற்ற வர வில்லை. கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீயினால் பாதிக்கப்படாத மக்களே தங்களுக்குள் தாங்களே உதவிக்கொண்டனர். பலர் தங்கள் வீடுகளையும், வீடுகளின் பிரிட்ஜ்களையும்(அங்கு உறையவைக்கப் பட்ட உணவுகளை அதிகம் பயன்படுத்துவர்) பாதிக்கப்பட்ட மக்களுக்கு திறந்து விட்டனர்.
கடலில் குதித்து உயிர் பிழைத்த மக்கள்
சாலைகளில் கார்கள் பற்றி எரிந்ததால், சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை. கைக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி தப்பிக்க வேண்டிய சூழல். தீயின் உக்கிரத்தி லிருந்து தப்பிக்க, பசிபிக் பெருங்கடலில் குதித்து, பலமணிநேரம், நீரிலேயே குழந்தை களுடன் பலர் போராடியுள்ளனர். வயதானவர்கள், ஓட முடியாதவர்கள் பலர் தீயிலிருந்து மீண்டதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆகஸ்ட் 13 வரை 96 என்று அதி காரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், எரிந்த வீடுகளிலும், கார்களிலும் தேடும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 1300 என்று 5 நாட்களுக்குப்பின் முன்னணி அமெரிக்க ஊடகங்களும் தெரிவிக்கின்றன. அமெரிக்க வரலாற்றில் இது போன்ற தொரு தீ விபத்து ஏற்பட்டதில்லை, இத்தகைய பேரழிவுத் தீ விபத்தை அமெரிக்கா கண்ட தில்லை என்பதை தற்போது கிட்டத்தட்ட அனைத்து வால்ஸ்டீரிட் ஊடகங்களும் மெதுவாக சொல்லத் தொடங்கி விட்டன.
மாய், லகய்னா நகரங்கள்
ஹவாய் தீவின் மேற்கு மாய் மற்றும் அங்கு முன்னாள் பூர்வகுடி ஆட்சியின் போது தீவின் தலைநகராக இருந்த லகய்னா ஆகிய நகரங்களை தீ தனது கோர நாக்கு களால் கிட்டத்தட்ட துடைத்தெறிந்துவிட்டது. கிட்டத்தட்ட 5 நாட்களுக்குப் பிறகுதான் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிபிஎஸ் செய்தி ஸ்தாபனம் சிறப்பு முழு நேர ஒளிபரப்பில் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளும் நான்கு சக்கர வாகனங்களும் முற்றாகத் தீக்கிரையாகிவிட்டன. இதுநாள்வரை வீடுகளில் வசித்து வந்த நடுத்தர மக்கள் தற்போது வீடிழந்த வர்களாக பொது இடங்களில் தஞ்சமடைந் துள்ளனர். அமெரிக்காவின் பிரபல தொலைக் காட்சி பிரமுகர் ஓபரா வின்பிரே, பாதிப் படைந்தவர்களை, அவர்களின் தேவைகளை, அவர்கள் தற்போதிருக்கும் கஷ்டமான நிலையை தொலைக்காட்சிகளின் மூலம் மக்களுக்கு காட்சிப்படுத்துகிறார்.
அமெரிக்க ஒன்றிய அரசு செய்தது என்ன?
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆகஸ்ட் மாதத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் கேட்டகரி 5 வகை சூறாவளிப் புயலான கத்ரீனா தாக்கியது. சுமார் 1400 பேர் உயிரி ழந்தனர். 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால், அன்றைய மாநில அரசோ அல்லது அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ் அரசோ மக்களுக்கு எந்த உதவியையும் செய்ய வில்லை. அது கடும் விமர்சனத்திற்கு உள்ளா னது. தன் மக்களை காக்க தவறிய ஜார்ஜ் புஷ் அரசு அதேசமயம், இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மக்களை வேட்டை யாட பல பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொண்டிருந்தது. தற்போது, அதே போன்றதொரு பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களை எச்சரிக்கத் தவறிய நிர்வாகம், நிவாரண நடவடிக்கைகளையும் மிகவும் மெதுவாகவே மேற்கொள்கிறது. கத்ரினா சூறாவளி தாக்கிய போது நடைபெற்றது போலவே 18 ஆண்டு களுக்குப் பின்பும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு தன் மக்களுக்கு நிவாரணம் வழங்கா மல், உக்ரைன் யுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை
இதுவரை உயிரிழந்தவர்களுக்கு அரசு எவ்வித நிவாரணமும் அறிவிக்கவில்லை. தீக்காயமடைந்தவர்கள் தங்களது இன்சூ ரன்ஸை கொண்டே சிகிச்சை பெற்று வருகின்ற னர். வீடு மற்றும் பொருட்களை இழந்தவர் களுக்கு எவ்வித நிவாரணமும் கிடையாது. அரசு அறிவித்துள்ள அவசரநிலையின் காரணமாக, வருங்காலத்தில் அவர்கள் தங்கள் வீடுகளை மீண்டும் அஸ்திவாரத்தி லிருந்து ஆரம்பிக்கும் போது, அவர்கள் பெறும் கடனுக்கான வட்டியில் சில சலுகை கள் கிடைக்கலாம் என்கின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்றம்
சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிப்பது என்றால், அமெரிக்க நாடாளு மன்றத்தில் அந்த மசோதாக்கள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கும், நிறைவேற்றப்படாது அல்லது அதைப் போல பல மடங்கு அதிக மாக சில கார்ப்பரேட்களுக்கு சலுகைகள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி பெற்று விடுவர். ஆனால், சாதாரண மக்களுக்கான அவசர கால உதவியைக்கூட நிறுத்திவிடுவர். இதுதான் அமெரிக்காவின் சுதந்திரம், ஜனநாயகம். உக்ரைன் அமைதி உடன்படிக்கையை கைவிட்டு தொடர்ந்து சண்டையிட, அமெரிக்கா இதுவரை 115பில்லியன் டாலர்கள் ஆயுதம் வழங்கியுள்ளது. பெண்டகனின் இராணுவ பட்ஜெட் சுமார் 780 பில்லியன் டாலர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க மனமில்லை. இதுதான் ஏகாதிபத்தியத்தின் அடிப்படைக் குணம்.
- தூத்துக்குடி க. ஆனந்தன்