world

img

உலகம் முழுவதும் 28 நாட்களில் 2,500-க்கும் அதிகமானோர் பலி

நியூயார்க், ஆக.12- கடந்த ஓராண்டு காலமாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2019 இறுதியில் பரவ தொடங் கிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளில் உலகை ஒரு புரட்டு புரட்டியெடுத்துவிட்டது. இந்த கொரோனா அலை யால் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகிய நிலை யில், 3 கோடிக்கும் அதிகமானோர் இயல்பு நிலையை இழந்துள்ளனர். தடுப்பூசியால் 2022இன் நடுப்பகுதி யில் கொரோனா பரவல் சற்று குறைந்து உலக நாடு கள் தற்பொழுது இயல்புநிலைக்கு திரும்பிய நிலை யில், கடந்த 2 வாரமாக அமெரிக்காவில் கொரோனா வால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்தது.  இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் “எரிஸ்” (ஓமைக்ரான் கொரோனா வேரியண்ட் EG 5) என  அழைக்கப்படும் புதிய வகை கொரோ னா வேகமாக பரவி வருகிறது.  இத னால் ஐரோப்பிய நாடுகள் கவலைய டைந்துள்ளன. பிரிட்டன் மட்டு மின்றி அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கொ ரோனா அலையா? என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலையில், கடந்த 28 நாட்களில் (ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 6 வரை) உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் (1.5மில்லியன்) கொரோனா வைரஸால் பாதிக் கப்பட்டுள்ளதாகவும், 2,500 க்கும் மேற்பட்ட உயிரி ழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளி யிட்டுள்ளது. ஆனால் வரும் காலங்களில் கொரோ னா பரவல் எப்படிஇருக்கும் என எச்சரிக்கை எதுவும் உலக சுகாதார நிறுவனம் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.