world

img

தற்காலிக குடியிருப்புகளில் லட்சம் குழந்தைகள்

லண்டன், ஜூலை 31- இங்கிலாந்தில் குடியிருப்பதற்கு வீடு  இல்லாமல் 1 லட்சத்து 31 ஆயிரம் குழந்தைகள் தற்காலிகக் குடியிருப்பு களில் இருப்பதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. இந்தப் புள்ளிவிபரங்கள் அரசால்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டி ருக்கின்றன. நடப்பாண்டில் மார்ச் மாத  நிறைவில் கடந்த ஆண்டோடு ஒப்பிடு கையில் தற்காலிகக் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை 33.3 விழுக்காடு  அதி கரித்திருக்கிறது. உணவு விடுதிகளில் அல்லது ஒரு படுக்கை மற்றும் உண வுடன் கூடிய இடங்களில் சுமார் 14 ஆயி ரம் குடும்பங்களின் உறுப்பினர்கள்  தங்க  வைக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மீது கவனம் அதிகமாக இருக்க வேண்டி யதால், தற்காலிக முகாம்களில் தங்கும் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. தனியாரின் வாடகைச் சந்தையே வீடில்லாமல் அவதிப்படும் நிலைமைக்குக் காரணம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

வீட்டு வரி மற்றும் அட மானத் தொகையில் ஏற்படும் திடீர் மாற்றங்களே இந்த சந்தை பெரும் ஏற்ற இறக்கத்தோடு இருப்பதற்கான காரணமாகும். அதோடு, வீடுகளுக்கான வாடகைப்படியை கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்ததும் நெருக்கடிக்குக் காரணமாக அமைந்திருக் கிறது. முதியவர்களுக்கு அடுத்தபடியாக, வீடே இல்லாமல் நெருக்கடியில் சிக்கி யிருப்பது குழந்தைகள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்கா லிக இருப்பிடங்களில் 1 லட்சத்து 31 ஆயிரம் குழந்தைகள் தங்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 21 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்கள் வீடு களை விட்டு வெளியேற்றப்பட்டதே இவர் களுக்கு குடியிருப்புகள் இல்லாமல் போன தற்குக் காரணமாகும்.  கொரோனாவுக்குப் பிறகு வீட்டு வாடகை  கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் வாடகைப்படி அப்படியே 2020 ஆம் ஆண்டில் எவ்வளவு இருந்ததோ, அதே அளவில் உள்ளது. ஏராளமான வாட கைதாரர்கள் வாடகைப் பணத்தைத் தர முடியாமல் வீடுகளைக் காலி செய்து  விட்டு செல்வதற்கு இடம் கிடைக்காமல் தற் காலிகக் குடியிருப்புகளில் குடியேறி யுள்ளனர். வலதுசாரி ஆட்சியாளர்கள் இந்த நெருக்கடிக்கான தீர்வைப் பற்றி அக்கறை காட்டாமல் இருப்பதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கூடுதல் நெருக்கடி

கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலையோ 175 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழைகளைத் தாண்டி, உயர் நடுத்தர மக்களைக்கூட இந்தப் பிரச்சனை பாதித்தது. இந்நிலையில் தான், அடமானத்திற்கான வட்டி உயர்த்தப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் வாடகையை அதி கரிக்க, வீடுகளைக் காலி செய்யத் தொடங்கினார்கள். குடியிருப்பதற்காக இல்லாமல் வீடுகளை வாடகைக்கு விடவே பலர் விலைக்கு வாங்கி, அவற்றை அடமானம் வைத்து வாடகை வசூலித்து, கடனைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.  தற்காலிக முகாம்களின் தேவை அதிகரிக்கையில் நெருக்கடி முற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்த கைய நெருக்கடி ஏற்படுவதற்குள் தீர்வை  எட்ட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வர்கள் கோரி வருகிறார்கள். இந்நிலை யில் பேங்க் ஆப் இங்கிலாந்து அடமானத் திற்கான வட்டி விகிதத்தை மேலும் அதி கரித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டு களில் பன்னிரெண்டாவது முறையாக இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.