ஆப்பிரிக்காவின் வடமேற்கில் மொராக்கோ உள்ளது. இதன் அரசர் ஆறாம் முகமது. 1999 முதல் இவரது ஆட்சி நடைபெறுகிறது. 3.57கோடி மக்கள் தொகை . 2020 நவம்பரில் மொராக்கோ அரசு தனது ராணுவத்தை மொராக்கோ ராஜ்ஜியத்திற்கும் சகாரா அரபு ஜனநாயக குடியரசுக்கும் இடைப்பட்ட எல்லைக்கு அனுப்பியது. இது 1991- ல் சகாரா பொலிசாரியோ முன்னணிக்கும் மொராக்கோ அரசருக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் .மேற்கு சகாரா பகுதியில் அதன் அரசியல் வழியை தீர்மானிக்க பொதுஜன வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. ஒப்பந்தம் வழி செய்தது. ஆனாலும் இதுவரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக தேக்க நிலை உள்ளது. மேற்கு சகாரா மொராக்கோ கட்டுப்பாட்டில் உள்ளது. 2022 ஜனவரி மத்தியில் ஐநா சபை மேற்கு சகாரா விற்கு சிறப்புத் தூதரை அனுப்பியது.
அவர் பெயர் ஸடாப்பன் தி மிஸ்துரா .இவர் மொராக்கோ, அல்ஜீரியா, மௌரி டானியாவுடன் மேற்கு சகாரா அரசியல் நிலைமை குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். மிஸ்துரா ஏற்கனவே ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியாவில் அமெரிக்க யுத்தங்களினால் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காண அனுப்பப்பட்டவர் தான். ஆனால் எந்த தீர்வும் ஏற்படவில்லை. ஜனவரி 14- ல் மொராக்கோ தலைநகரம் ரபாட்டில் மிஸ்துரா அயலுறவு அமைச்சரை சந்தித்தார். இவர் நடத்தும் கூட்டங்களால் எவ்வித தீர்வும் ஏற்படப்போவதில்லை. 2020 ஆகஸ்டில் அமெரிக்காவின் முன்முயற்சியில் ஆபிரகாம் ஒப்பந்தம் காணப்பட்டது. இதன் மூலம் மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் ஒத்துழைக்கவேண்டும்; இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்யும். மேற்கு சகாராவை மொராக்கோ ஆக்கிரமித்துள்ளதை சட்டப்பூர்வமாக்கும். ஜோ பைடன் ஜனாதிபதி ஆன பிறகு இந்த ஒப்பந்தத்தில் சில பகுதிகள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றம் செய்யப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆயுத விற்பனை மட்டும் நிறுத்தப்பட்டது. 2021 நவம்பர் இறுதி வரை, மொராக்கோ மற்றும் மேற்கு சகாராவி ல் உள்ள பாஸ்பேட் தாது பொருளை ஏற்றுமதி செய்து 645 கோடி டாலர் மொராக்கோ சம்பாதித்தது. உலகின் மொத்த பாஸ்பேட்டில் 72 சதவிகிதம் இங்கு தான் உள்ளது. பாஸ்பேட், நைட்ரஜன் உடன் சேர்ந்து செயற்கை உரம் தயாரிக்க உதவுகிறது. உணவு உற்பத்தியில் இந்த உரம் பிரதான பங்கு வகிக்கிறது. மேற்கு சகாரா விலிருந்து மொராக்கோ பாஸ்பேட் எடுப்பது சர்வதேச விதிமுறைகளுக்கு முரண்பட்டது .ஆனாலும் மேற்கு சகாராவின் பாஸ்பேட்டை 2 நியூசிலாந்து கம்பெனிகளும், இந்தியாவில் ஒரிசாவின் பாரதீப் பாஸ்பேட் லிமிடெட் கம்பெனியும் வாங்குகின்றன. அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களால் மேற்கு சகாரா தொடர்ந்து மொராக்கோவின் ஆதிக்கத்தில் இருக்கும். அமைதி திரும்புவதற்கு பதிலாக ஆபிரகாம் ஒப்பந்தம் மேற்கு சகாராவில் யுத்தத்தைத் தூண்டும். மேற்கு சகாராவை மொராக்கோ ஆக்கிரமித்துள்ளதை யாராவது எதிர்த்துப் பேசினால் அவர் ராஜாவுக்கு எதிரானவர் என தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அமெரிக்காவின் நெருங்கிய ஆப்பிரிக்க கூட்டாளியாக மொராக்கோ உள்ளது.