டோக்கியோ, ஜன.21- 1991 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் அரசாங் கத்துக்கு ஜப்பான் அரசு பெரும் அழுத்தம் கொடுத்து வந்தது தற்போது அம்பலமாகி யுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா வின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 80 நாடுகளில் 750க்கும் மேற்பட்ட படைத்தளங் கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெர்மனி யில்தான் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கப் படைத்தளங்கள் உள்ளன. அடுத்ததாக ஜப்பா னில் அதிகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படைத்தளங்களுக்கு ஆகும் செலவு அவை அமைக்கப்பட்டுள்ள நாடுகளின் தலை யில்தான் கட்டப்படுகின்றன. பெரும்பாலான நாடுகளில் அமெரிக்கப் படைகள் செய்யும் அட்டகாசங்கள் அந்தந்த நாடுகளின் சட்டங்க ளுக்குக் கீழ் வராது. இந்தப் படைத்தளங்கள் போன்று தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன் சிலும் அமெரிக்கப் படைத்தளங்கள் இருந்தன. அமெரிக்காவுக்கும், பிலிப்பைன்சுக்கும் இடை யிலான ராணுவ ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிளார்க் விமானப்படைத்தளம் மற்றும் சுபிக் கப்பற்படைத்தளம் ஆகியவற்றில் அமெரிக்கா வின் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த இரண்டு தளங்களிலும் இருந்த அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் இருக்கும்.
பிலிப்பைன்சின் பாதுகாப்புக்கு என்று இந்த உடன்பாடு எட்டப்பட்டாலும், இந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தவே அமெரிக்கப் படைகள் அங்கு நிறுத்தப்பட்டன. இதற்கு பிலிப்பைன்சின் அண்டை நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. உள்நாட்டிலும் மக்கள் மத்தியில் பெரும் குமுறல் இருந்து வந்தது. ஆனால், அங்கி ருந்து அகல அமெரிக்கா எந்தவித விருப்பமும் காட்டவில்லை. மாறாக, எப்படியாவது அங்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்பகுதி யில் உள்ள பினாடுபோ எரிமலை வெடித்துச் சிதறி யது. இரண்டு படைத்தளங்களும் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்தன. பெரும் சேதத் தைக் கண்ட இந்தப் படைத்தளங்களை மீண்டும் தங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்தது. இரண்டு படைத்தளங்களில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்தன. இதுதான் சரியான தருணம் என்று எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதே ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்காவின் விருப்பப்படியே உடன்பாடு எட்டப்பட்டது. கடுமையான எதிர்ப்பு மக்களிடமி ருந்து கிளம்பியிருந்ததால் கிளார்க் விமானப் படைத் தளத்தை திருப்பித் தருவது என்றும், சுபிக் கப்பற்படைத் தளத்தை மேலும் பத்து ஆண்டுகளுக்கு அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வது என்றும் உடன்பாடு செய்து கொண்ட னர். ஆனால் பிலிப்பைன்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த உடன்பாட்டிற்கு ஒப்புதல் கிடைக்காத தால், ரத்து செய்யப்பட்டது. 1992ல் சுபிப் படைத் தளம் பிலிப்பைன்ஸ் வசம் வந்தது.கிளார்க் படைத்தளத்தை ஜப்பானுக்கு மாற்றிக் கொண்டார்கள்.
ஜப்பான் தொடர் தலையீடு
அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைக் கப்பட்ட காலத்திலும், எரிமலை வெடிப்பால் அழிந்தபோதும், பின்னர் மீண்டும் தளங்கள் அமைக்க முயற்சி நடந்தபோதும் ஜப்பான் தொடர் தலையீடுகளைச் செய்திருக்கிறது. அமெ ரிக்கா மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அலு வலகங்களுக்கிடையில் நடந்த கருத்துப் பரி மாற்றம் தற்போது வெளியாகியுள்ளது. ரகசிய ஆவணங்கள் பொதுவானதாக மாற்றப் பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் மீது அழுத்தம் தருமாறு, ஜப்பான் அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத் திருக்கிறது. தொடர்ந்து கடிதங்களை எழுதியி ருக்கிறார்கள். ஜப்பானும் பிலிப்பைன்சுக்கு அழுத்தம் தந்துள்ளது. பிலிப்பைன்சின் இறை யாண்மையைக் குலைக்கும் வகையில் அமெ ரிக்காவுக்கு ஆதரவாக அப்போதைய ஜப்பானிய அரசு நடந்து கொண்டது அம்பலமாகியுள்ளது.