காசா மீதான இஸ்ரேலின் போர் வெறித் தாக்குதலை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்காக ரஷிதா ட்லைப் என்ற பாலஸ்தீன வம்சாவளி அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினரை தணிக்கை செய்யும் கண்டன தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸ் (அமெரிக்க நாடாளு மன்றம்) நவம்பர் 7 அன்று நிறைவேற்றியது.
வேடிக்கை என்னவென்றால் அவர் சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சியின் 22 உறுப்பினர்களும் குடியரசு கட்சியின் பெரும்பான்மையினரும் இணைந்து அவ ருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ரஷிதா வுக்கு எதிராக வாக்களித்த ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இஸ்ரேல் ஆதரவு குழுக்களி டமிருந்து விரிவாக நன்கொடையைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன ஆதரவு இயக்கமும் சபை யில் உள்ள முற்போக்கு உறுப்பினர்களும் இந்த தணிக்கைக்கு எதிராக கண்டன குரல் எழுப்புகின்றனர். எங்களுடைய சக உறுப்பினர்கள், சபையின் ஒரே ஒரு பாலஸ்தீன அமெரிக்க பிரதிநிதியின் குரலை ஒடுக்க முயல்வது மூர்க்கத்தனமானது என்றும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘தணிக்கை’ என்பது அடிப்படையில் பொது அவமானத்தின் ஒரு வடிவமாகும். சட்ட மியற்றும் அதிகாரம் படைத்துள்ள ஒரு உறுப்பினரை சபாநாயகர் கண்டிப்பதாகும். அமெரிக்க காங்கிரஸின் வரலாற்றில் இது மிகவும் அரிதாக நடக்கின்ற ஒரு நிகழ்வு.
இது இரண்டாவது தணிக்கை தீர்மானம்!
ரஷிதா ட்லைப் சந்திக்கும் இரண்டாவது தணிக்கை தீர்மானம் இது. இவர் யூதர் களுக்கு எதிரான வெறித்தனத்தை ஆதரிப்ப தாக குற்றம் சாட்டி கடந்த வாரம் குடியரசுக் கட்சியின் உறுப்பினர் மர்ஜோரி டைலர் கிரீன், ட்லைப் மீது தணிக்கையை அறிமுகப்படுத்தி னார். ஆனால் அப்பொழுது அதை நிறை வேற்ற முடியவில்லை. நவம்பர் 7 அன்று ஜார்ஜியாவின் ரிச் மெக்கார்மிக் என்ற குடியரசுக் கட்சி உறுப்பினர் கொண்டுவந்த தணிக்கை தீர்மானம் நிறைவேறியது. மிக வும் குழப்பமாக நடைபெற்ற புதிய சபா நாயகர் மைக் ஜான்சனின் தேர்வுக்கு பிறகு தான் இந்த தணிக்கை நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். 234 வாக்குகள் ஆதரித்தும்,138 வாக்குகள் எதிர்த்தும் பதிவாகின.
இஸ்ரேல் அரசை நிர்மூலமாக்கிட முடிவு செய்துள்ள ஹமாஸ் இயக்கத்தின் அறை கூவல்களை இவர் ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை அதிபர் பைடன் ஆதரிப்ப தாக குற்றம்சாட்டி ஒரு வீடியோவை அவர் கடந்த வாரம் வெளியிட்டார். ஜனநாயக கட்சியின் சக உறுப்பினர்களுக்கு இது ஆத்திரமூட்டியது.
அமெரிக்க காங்கிரஸின் ஒரே ஒரு பாலஸ்தீன அமெரிக்க உறுப்பினராக என்னுடைய கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. இதனை யூத எதிர்ப்பு என குற்றம்சாட்டுவதை நான் ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டார். தன்னுடைய கருத்துக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகுவின் போர் வெறிக்கு எதிரானது.
இதனை யூதர்களுக்கு எதிரான வெறி என பிரச்சாரம் செய்வது மிகுந்த ஆபத்தானது என்றும் பேசியுள்ளார்.
யார் இந்த ரஷிதா ட்லைப்?
டெட்ராய்ட் நகரில் குடியேறிய பாலஸ் தீன பெற்றோருடைய மகள். வழக்கறிஞ ராக தன் வாழ்க்கையை துவக்கியவர். மிச்சி கன் மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடு க்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்மணி. அமெரிக்க காங்கிரஸின் முதல் இரண்டு முஸ்லிம் பெண்களில் ஒருவர்.
2014 வரை முதியோருக்கான இலவச சுகாதார கிளினிக்குகள் மற்றும் மீல்ஸ் ஆன் வீல்ஸ்((Meals on Wheels)திட்டங்களுக்கு பல மில்லியன் டாலர்களை திரட்டுவதில் உதவியவர்.
நதியிலிருந்து கடல் வரை!
நேதன்யாகுவின் லிகுத் கட்சி, ஜோர்டான் நதிக்கும் கடலுக்கும் இடையி லான பகுதி முழுமையும் இஸ்ரேலிய இறை யாண்மைக்கு உட்பட்டது என்று வரையறுக் கிறது. இதற்கு எதிராகத்தான் ஜோர்டான் நதி யிலிருந்து கடல் வரை சுதந்திர பாலஸ் தீனம் என்ற இயக்கத்தை ரஷீதாதுவக்கினார்.
இது இஸ்ரேல் அரசை அகற்றுவதற்கான முழக்கம் மட்டுமல்ல; சுதந்திரம், மனித உரி மைகள் மற்றும் அமைதியான சக வாழ்வு க்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்தும்
கடலூர் சுகுமாரன்
அழைப்பும் ஆகும். காலனிய எதிர்ப்பு இயக்கத்தில் இதன் வேர்கள் ஆழமாக வேரூ ன்றி உள்ளன என்றும் தெளிவுபடுத்துகிறார்.
நான் அமைதியாக இருக்கப் போவ தில்லை, என் வார்த்தைகளை உங்களால் சிதைத்து விட முடியாது, நம்முடைய தேசம் முழுவதும் எழும் மனித உரிமைக்கான எண்ணற்ற குரல்களை உங்களால் ஒடுக்கி விட முடியாது என அமெரிக்க அரசை நோக்கி சவால் விடுகிறார்.
போர் நிறுத்தம், அமைதி வேண்டும்!
போர் நிறுத்தம் மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அழைப்பு விடுக்கும் யூத ஆதரவாளர்களுடன் ஒற்றுமையாக நான் நிற்பதில் பெருமைப் படுகிறேன். எந்த ஒரு அடக்குமுறைக்கும் அஞ்சமாட்டேன். என்னை அவமானப்படுத்த வும் முடியாது. என் குரலை அடக்கி என்னை மவுனமாக்கவும் முடியாது என்று ரஷீத் கர்ஜிக்கிறார்.
ராணுவ விதிகள் எதையும் பின்பற்ற தேவையில்லை; வாகனங்களை நிறுத்தும் “பார்க்கிங்” இடமாக காசாவை மாற்றுங்கள் என இஸ்ரேலை அமெரிக்க பிரதிநிதிகள் கொம்பு சீவி விடுகின்றார்கள். காசாவை தவிடு பொடியாக்க வேண்டும் என்று குடி யரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் லின்ஸே கிரகம் மற்றும் மேக்ஸ் மில்லர் ஆகியோர் விஷம் கக்கிவருகின்றனர்.இந்த நிலையில் ஒற்றைக் குரலாக இருந்தாலும் ஒடுக்க முடியாத குரலாக ரஷீதா ட்லைப்பின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.