ஹைபர் சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹவுதி
இஸ்ரேல் மீது அதிவேகமாக சென்று தாக்கும் ஹைபர் சோனிக் வகை ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது ஹவுதி அமைப்பு. இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து ஹைபர் சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா மீதான தாக்குதல் நிற்கும் வரைஇஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்வோம். மேலும் பென் குரியன் விமான நிலையத்திற்கு வரும் இஸ்ரேல் விமானங்கள் மீது தாக்குதல் தொடரும் எனவும் ஹவுதி செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் தடைகள் : தைரியமாக எதிர்க்கிறது வெனிசுலா
வெனிசுலாவில் செயல்படும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் உரி மங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்நி லையில் இது போன்ற தடைகளும் நெருக்கடி களும் எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எங்கள் தொழி லாளர்கள் மூலமாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளோம் என்று வெனிசுலா துணைத் தலைவர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார். தற்போது நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பேரல் எண்ணெய் உற்பத்தியை அந்நாடு செய்து வருகிறது.
மாதிரிகளை எடுக்க விண்கலம் அனுப்பியது சீனா
செவ்வாய்க்கிரகம் அருகில் உள்ள விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா விண்கலம் அனுப்பியுள்ளது. இந்த மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர தியா வென்-2 என்ற விண்கலத்தை லாங் மார்ச் 3 பி என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது சீன அரசு. செவ்வாய்க் கிரகத்தை பற்றி மேற்கொண்டு வரும் ஆய்விற்கான முக்கிய படியாக இந்த முயற்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தை பற்றி ஆராயும் பணியில் சீனாவும் அமெரிக்காவும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனர்களின் துயரம் : வெடித்து அழுத தூதர்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாலஸ்தீனர்களின் நிலையை எடுத்து ரைக்கும் போது பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கதறி அழுதார். அக்கூட்டத்தில் பேசிய போது குண்டுவீச்சு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே பாலஸ்தீனர்கள் தவித்து வருகின்றனர். எனக்கும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். என்னால் காசா குழந்தை களின் நிலையை பார்க்க முடியவில்லை எனக் கூறி மனம் உடைந்து கதறி அழுதார். மேலும் அக திகள் முகாமில் அவர்கள் வாழ்வதை பார்க்க முடியவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
புறாவுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80,000 அபராதம்
சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா என்பவருக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்றால் வனவிலங்கு மேலாண்மை அதிகாரியிடம் அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு தற்காலிக தடை விதித்தது ஃபெடரல் நீதிமன்றம்
வாஷிங்டன்,மே 30 - உலக நாடுகளின் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு தடை விதித்த அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அந்நாட்டின் ஃபெடரல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, உலக நாடுகள் மீது வரிகள் விதித்து வர்த்தகப் போர் துவங்கியுள்ளது. இந்த வரிவிதிப்பு முறைக்கு குடியரசு கட்சியின் பொருளாதார வல்லுனர்கள், தலைவர்களே எதிர்ப்புத் தெரி வித்திருந்தனர். மேலும் பைடனின் ஜனநாயக கட்சியின் தலைவர்கள், கார்ப்பரேட் நிறு வனங்கள் சர்வதேச வர்த்தக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இவ்வழக்கு சர்வதேச வர்த்தக நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள் பெஞ்ச் முன் வந்தது. அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் விசாரணை நடத்திய நீதிபதிகள் நிராகரித்து விட்டு, டிரம்ப்பின் வரி விதிப்புக்கு தடை விதித்தனர். அது மட்டுமின்றி 10 நாட்களுக்குள் அந்த உத்தர வை அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தர விட்டது. இந்த வழக்கு விசாரணையில், ஜனாதிபதி டிரம்பின் தலையீடுதான், இந்தியா- பாகிஸ்தா னுக்கு இடையேயான போரை நிறுத்தியது என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்டு லுட்னிக் குறிப்பிட்டு, இந்த தடை அமெரிக்காவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது எனக் கூறியுள்ளார். இந்த உத்தரவு டிரம்பின் அதிகாரத்திற்கு சவுக்கடி போல விழுந்தது. இந்நிலையில் தான் அந்த உத்தரவுக்கு எதிராக ஃபெடரல் நீதி மன்றத்தில் குடியரசுக் கட்சி மேல்முறையீடு செய்தது. அதன் பின் வர்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது ஃபெடரல் நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு ஃபெடரல் நீதிமன்றம் எந்த விளக்கமும் தரவில்லை.