தனக்கு கொரோனா தொற்றுக்கான அறி குறிகள் இருப்பதால் தனிமைப் படுத்திக் கொள்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். 79 வயதாகும் பைடன், ஜனாதி பதியின் இருப்பிடமான வெள்ளை மாளிகையிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாலும், வழக்கமான பணிகளைக் கவனிக்கப் போகிறார். பேக்ஸ்லோவிட் என்ற மருந்தை அவர் எடுத்துக் கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளி யிட்டுள்ள தகவல் குறிப்பு தெரிவிக்கிறது.