உலகிலேயே மிகப்பெரியது..
பீலே உடல் அடக்கம் செய்யப்பட்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டம் தான் உலகிலேயே மிகப்பெரிய கல்லறை தோட்டம் ஆகும். 4.4 ஏக்கர் நிலப்பரப்பும், 14 அடுக்கு மாடிகளை கொண்டது.
பிரேசில் நாட்டிற்கு 3 முறை கால்பந்து உலகக்கோப்பை வென்று கொடுத்தவரும், எளிய மற்றும் கறுப்பின மக்க ளும் கால்பந்து உலகில் சாதிக்கலாம் என விளையாட்டு உலகில் புதிய புத்துணர்வை ஏற்படுத்திய “கால்பந்து விளையாட்டின் பிதாமகன்” பீலே (82) கடந்த வாரம் (டிச., 29) புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புத்தாண்டுக்காக அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலை யில், திங்களன்று சான்டோஸ் நகரில் உள்ள பெல்மிரா மைதானத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. 24 மணிநேரமும், உலகம் முழு வதும் இருந்து பல்லாயிரக்கணக்கான கால் பந்து ரசிகர்கள், பொதுமக்கள், கால்பந்து வல்லுநர்கள், பிபா தலைவர்கள், உலக நாடு களின் கால்பந்து அதிகாரிகள் என அனை வரும் பீலேவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பீலேவின் உடல் நெக்ரோ பால் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தி லும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆனால் கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, அவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஷார்ட்ஸ்
கால்பந்து ரசிகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பீலேவின் இறுதி அஞ்சலியால் பிரேசில் நாடே மிகவும் அமைதியாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டம் கூட சுமாராகவே இருந்ததாகவும் தகவல் வெளியாகியது. இறுதி அஞ்சலிக்கு பிரேசிலில் 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டது. பிரேசில் நாட்டில் ஏதாவது ஒரு கால்பந்து மைதானத்திற்கு பீலே பெயர் சூட்ட வேண்டும் என பிபா வேண்டுகோள் விடுத்துள்ளது.