லண்டன், டிச.24- அதிகரித்துள்ள கடுமையான விலைவாசி உயர்வால் ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய கிறிஸ்துமஸ் களையிழந்து காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக யூரோ மண்டலத்தில், பெரும் நெருக்கடி காணப் படுகிறது. இப்போதுள்ள நெருக்கடிக்கு மூன்று முக்கியமான காரணங்கள் சுட்டிக்காட்டப்படு கின்றன. முதலாவதாக, பெரும் அளவில் அதி கரித்துள்ள பொருட்களின் விலைகள் மக்களின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் உள்ளன. இரண்டாவதாக, கடந்த ஐந்து காலாண்டுகளாக மக்களின் உண்மையான வருமானம் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. மூன்றாவதாக, நுகர்வோரிடம் காணப்பட்ட நம்பிக்கை பெரும் அடி வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் கோலாக லமாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கவலை தோய்ந்த முகங்கள் அதிக மாகக் காணப்படுகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி வியாபாரம் வழக்கமாகக் களைகட்டியிருக்கும். இந்தக் காலகட்டத்திற்கு என்று பெரும் பொருட்கள் உற்பத்தி செய்யப் பட்டு கடைகளுக்கு கொண்டு வரப்படும். அனை த்துப் பொருட்களும் விற்றுத் தீரும் அளவுக்கு வியாபாரம் நடக்கும். ஆனால், இந்த முறை கடைகளில் கூட்டம் இல்லாததோடு, பொருட்க ளின் எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே இருக்கிறது.
மின்விளக்குகள் பொருத்தப்பட்ட நட்சத்தி ரங்கள் ஏராளமான அளவில் வீடுகளிலும், வீதிக ளிலும் பொருத்தப்படும் காலமாக இந்தப் பண்டி கைக்காலம் இருக்கும். தங்கள் வீட்டில் மாட்டப் படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைந் தது பற்றிக் கருத்து தெரிவித்த அயர்லாந்தின் டியாகோ கோன்சால்வஸ், “எண்ணிக்கை குறைந்தது மட்டுமல்ல. மாட்டப்படும் மின் விளக்குகள் பொருந்திய நட்சத்திரங்கள் கூட மூன்று அல்லது நான்கு மணிநேரங்கள் மட்டுமே எரிய வைக்கப்படுகின்றன” என்றார். ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தில் ஆண்டு முழுவதும் பணவீக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. இப்போதும்கூட இரட்டை இலக்கத்தில்தான் அது இருக்கிறது. நவம்பரில் பத்து விழுக்காட்டை எட்டிய பணவீக்கம் மட்டு மில்லாமல், அதே மாதத்தில் பிரிட்டனின் நுகர் வோர் விலைக்குறியீட்டு எண்ணும் 10.7 விழுக்காட்டைத் தொட்டது. இந்த இரண்டு குறித்தும், ஐரோப்பிய நாடுகளும், பிரிட்டனும் வைத்திருந்த இலக்கை விட இரண்டு விழுக்காடு அதிகமாகவே இருக்கிறது.
வாங்குவது குறைகிறது
மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததால், அவர்களால் வாங்கப்படும் பொருட்களின் எண் ணிக்கையும் குறைந்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக மூத்த பொருளாதார அறிஞரான தாமஸ் டிவோரக், “தற்போதுள்ள நிலவரத்தைப் பார்த்தால், விலைகள் கடுமையாக ஏறிவரும் சூழலில் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூட சேமிப்பை எடுக்க முற்படமாட் டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். பலரும் கிறிஸ்துமஸ் பரிசுகளின் பட்டியலை சுருக்கி விட்டார்கள் என்பதுதான் ஆய்வுகள் சொல்லும் செய்தியாகும். குரோஷியா, ஸ்லோவேகியா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் விடுமுறையை போதுமான அளவு மக்கள் செலவழிக்க மாட்டார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்களின் வருமானத்தில் மீட்சி இருக்கும் என்று நாங்கள் எதிர் பார்த்தாலும், பணவீக்கம் அதிகரிப்பதன் விளைவு நுகர்வில் பெரும் பாதிப்பை ஏற் படுத்தும் என்று ஸ்லோவேகியாவின் பொருளா தார நிபுணர்களில் ஒருவரான லுபோமிர் கோர்ஸ்நாக் கூறுகிறார். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான நடவ டிக்கைகளை எடுக்க மறுக்கும் வலதுசாரி ஐரோப்பிய அரசுகளைக் கண்டித்து பெருந் திரள் மக்கள் போராட்டங்கள் நடந்து வரு கின்றன.