பொகோடா,ஜன.27- கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட கொலம்பியா மக்களை கொண்டுவந்த இரண்டு விமானங்களுக்கு தரையிறங்கும் அனுமதியை வழங்க கொலம்பியா அரசு மறுத்தது. இதனைத் தொடர்ந்து கொலம்பியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிப்பேன். இந்த வரி ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். மேலும் கொலம்பியா மீது பொருளாதாரத் தடைகள், ஜனாதிபதி பெட்ரோவின் கட்சியினர் மீது விசாக் கட்டுப்பாடுகள் விதிப்பேன் என தொடர் மிரட்டல்களை விடுத்தார். டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு போதிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்களை கட்டாயமாக நாடு கடத்தி வருகிறார். இதனடிப்படையில் ஒவ் வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில் கொலம்பி யாவிற்கு சென்ற விமானங்களை தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட பிறகு தான் இந்த மிரட்டல்களை டிரம்ப் விடத்துவங்கினார். இதனைத் தொடர்ந்து கொலம்பியா, அமெரிக்காவிற்கு அடிபணிந்து விட்டது என பல அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஊடகங் கள் செய்திகளை வெளியிடத்துவங்கின. அதே நேரத்தில் தான் கொலம்பியா இடதுசாரி அரசாங் கம் அமெரிக்காவின் மீது 25 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டது. மேலும் அமெரிக்காவுடனான பொருளாதார இழப்பை ஈடுகட்ட அமெரிக்காவைத் தவிர மற்ற அனைத்து உலக நாடுகளுக்கும் கொலம்பியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்கான வழி காட்டுதலை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் கொலம்பிய மக்கள் கொலம்பியப் பொருட்களை சந்தைப் படுத்தவும் பயன்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல வரி விதிப்பின் காரணமாக கொலம்பியாவில் அதிக விலையில் விற்பனை யாகும் அமெரிக்க பொருட்களுக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தியையும் பெருக்க வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிக்கும் அரசாங்கம் உதவும் எனவும் பெட்ரோ தெரி வித்துள்ளார்.