world

img

இடதுசாரி அரசைப் பாதுகாப்போம்

பொகோடா, ஜூன் 8- கொலம்பியாவில் உள்ள இடதுசாரி அரசைக் கவிழ்க்கப் பல்வேறு முயற்சிகள் நடந்து  வருவதால் அத்தகைய முயற்சிகளைத் தடுத்து  நிறுத்துவோம் என்று கொலம்பிய மக்களும்,  முற்போக்கு அரசியல்வாதிகள் மற்றும் அறிவு ஜீவிகள் அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். கொலம்பியாவில் குஸ்தவோ பெட்ரோ வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற தில் இருந்து பல்வேறு மக்கள் நலக் கொள்கை கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கொள்கைகள் அந்நாட்டின்  முதலாளிகள் மற்றும் பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் அடித்து வந்த கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது. பெரு நாட்டில் செய்தது போன்று நாடாளுமன்றத்தை வைத்து சட்டவிரோதமாக ஜனாதிபதியை நீக்கியதைப் போன்று இங்கு செய்ய முடியவில்லை.

இதனால் ராணுவம் மற்றும் காவல்துறை யினரை ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தூண்டி விடும் முயற்சியில் பெருவின் வலதுசாரிகள் இறங்கியிருக்கிறார்கள். இந்த முயற்சிகளுக்கு உலகப் புகழ்பெற்ற 400க்கும் மேற்பட்ட முற்போக்கு அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படுமோசமான முயற்சிகளில் கொலம்பியாவின் வலதுசாரிகள் இறங்கி யுள்ளனர். ஒரு மென்மையான கலகத்தை நடத்தி அதன் மூலம் இடதுசாரி அரசைத் தூக்கி யெறிவதே அவர்களின் நோக்கமாகும். ஜனநாய கத்தின் நண்பர்கள் அனைவரும் இதற்கு எதிராக நிற்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின், நோபல் பரிசு வென்ற அடோப்போ பெரிஸ் எஸ்குய்வெல், ஸ்பெயினின் நீதித்துறை வல்லுநர் பல்டாசார் கர்சோன், பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜீன்-லுக் மெலென்சோன், ஸ்பெயினின் முன்னாள் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகஸ், கொலம்பியா வின் முன்னாள் ஜனாதிபதி எர்னெஸ்டோ சாம்பெர்,  ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி ரபேல் கோரியா உள்ளிட்டோர் கையெழுத்திட்டி ருக்கிறார்கள்.

மேலும் அந்த அறிக்கையில், “கொலம்பிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட ஒரு அரசு அமைந்துள்ளது. இடதுசாரிகளான குஸ்தவோ பெட்ரோ ஜனாதிபதியாகவும், பிரான்சியா மார்கு வெஸ் துணை ஜனாதிபதியாகவும் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் இடதுசாரிகள் பெரும்பான்மை பெற்றுள்ளனர். சமமற்ற நிலை, சுற்றுச்சூழல் அழிவு மற்றும்  அரச வன்முறை ஆகியவற்றைக் கொண்ட தங்கள் அரசை மீண்டும் நிறுவ வலதுசாரிகள் முயற்சித்து வருகிறார்கள். பெட்ரோவின் சீர்திருத்தங்களை வலதுசாரிகள் கடுமையான எதிர்க்கின்றனர்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவு

பெட்ரோவின் சமூகச் சீர்திருத்தங்களுக்கு பெரும் ஆதரவு தரும் வகையில் நாடு தழுவிய பெருந்திரள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. தலைநகர் பொகோடாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. அதில் பெட்ரோவின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணியில் ஜனாதிபதி பெட்ரோவும், துணை  ஜனாதிபதி பிரான்சியா மார்குவெசும் நேரடியாகப் பங்கேற்றனர். பேரணியின் நிறைவில் மாற்றத்திற்கான பாதையில் அரசுடன் சேர்ந்து நடைபோடும் மக்களுக்கு நன்றி சொல்வதாக பெட்ரோ தெரிவித்தார். தலைநகர் பொகோடாவில் மட்டுமின்றி, கொலம்பியாவின் பல்வேறு நகரங்களில் இந்த அரசு ஆதரவுப் பேரணிகள் நடந்தன. பர்ரன்குயில்லா, மெடெல்லின், சாண்டா மார்டா மற்றும் காலி ஆகிய நகரங்களில் நடைபெற்ற பேரணிகளிலும் மக்கள் ஏராளமான அளவில் பங்கேற்றனர். தொழிலாளர்கள் மற்றும்  கல்வித்துறையைச் சேர்ந்தவர்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. நாடாளுமன்றத்தில் பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டி மக்கள் நலச் சீர்திருத்தங்களைக் குலைக்க  வேண்டாம் என்று பேரணிகளில் பேசியவர்கள் வலியுறுத்தினார்கள்.