world

img

மீண்டும் வருகிறது “போல்சா ஃபேமிலியா”

பிரேசிலியா, மார்ச் 4- கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தீவிர மான வலதுசாரிக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டதால் அதிகரித்த வறுமையைப் போக்கும் நடவடிக்கைகளில் பிரேசிலின் ஜனாதி பதி லூலா இறங்கியிருக்கிறார். 2003 ஆம் ஆண்டு முதல் 2010 வரையில் லூலாடி சில்வா பிரேசிலின் ஜனாதிபதியாக இருந்தார். இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத் திய அவர் மீது போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அரசியல் பொறுப்புகளில் இருந்து அவரை விலக்கி வைக்க வலதுசாரிகள் முயன்ற னர். அந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, அவை ஜோடிக்கப்பட்டவை என்பதை நிரூபித்து மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய லூலா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் பதவியேற்றிருக்கிறார். முந்தைய ஆட்சிக்காலத்தில் வறுமையை ஒழிக்கும் திட்டத்தில் அவர் பெரும் கவனம் செலுத்தினார். கோடிக்கணக்கான மக்கள் வறு மையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். ஜெய்ர்  போல்சானாரோ ஜனாதிபதியாக இருந்தபோது,  இவர்களில் பலர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கினார்கள். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மீண்டும் வறுமையைப் போக்கும் கொள் கைகள் நடைமுறைக்கு வரும் என்று லூலா உறுதி யளித்திருந்தார். 

போல்சா ஃபேமிலியா

போல்சா ஃபேமிலியா என்றால் குடும்ப நிதி என்று அர்த்தமாகும். ஒவ்வொரு குடும்பத்திற் கும் அடிப்படை மானியமாக 115 அமெரிக்க டாலர் மாதாமாதம் வழங்கப்படும். ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஒவ்வொன்றிற்கும் கூடுதலான 29 அமெரிக்க டாலர் தரப்படும். இந்த மானியத்திட்டம் லூலாவின் முந்தைய ஆட்சியிலும் நடைமுறை யில் இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் பலன் அடைந்தனர். தற்போது 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு இந்த குடும்ப நிதி வழங்கப் பட உள்ளது.  மீண்டும் இந்தத் திட்டத்திற்கு புத்துயிர் அளிக் கப்படுகிறது. இது குறித்துக் கருத்து தெரிவித் துள்ள லூலா, “இது ஜனாதிபதிக்கோ அல்லது நிர்வாகத்திற்கோ சொந்தமான திட்டம் கிடையாது. ஒட்டுமொத்த சமூகத்துக்கான திட்டமாகும். ஒட்டு மொத்த சமூகமும் இந்தத் திட்டம் நடைபெறுவ தைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஊடகம் வாயிலாக, உள் ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மூலமாக திட்டத்தின் செயல்பாடுகள் கண்கா ணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் யார் வறுமையின் பிடியில் இருக்கிறார்களோ, அவர்க ளுக்கு பலன் கிடைக்கும். அதே வேளையில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இது நாட்டில் உள்ள அனைத் துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்காது. நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலே, பொருளாதாரத்தை மீண்டும் வளர்க்க வேண்டிய தாகும். இதன் மூலம் போதிய ஊதியத்தை ஒவ் வொரு தொழிலாளியும் பெற முடியும். தேவைப் படும் இடங்களில் அரசு தலையீடு செய்வதன் மூலம் இதைச் சாதித்துவிடலாம். “ என்றார். குடும்ப நிதித்திட்டத்திற்கு 3 ஆயிரத்து 360 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கப்படவிருக்கிறது. பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.5 விழுக்காட்டிற்கு இந்த நிதி இணையா னதாகும். வறுமையின் பிடியில் இருக்கும் சுமார் 6 கோடிப் பேருக்கு உதவும் வகையில் இந்த நிதி செலவிடப்படும் என்று அரசுத்தரப்பில் தெரி விக்கப்பட்டிருக்கிறது. இந்த மானியத்தைப் பெற விரும்புபவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. குழந்தைகளுக்கு அனைத்துத் தடுப் பூசிகளும் போடப்பட்டிருக்க வேண்டும் மற்றும் பள்ளிக் கூடத்தில் கல்வி பயில வேண்டும் என்பன உள்ளிட் டவை அந்த நிபந்தனைகளில் அடங்கும்.