அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தின் காரணமாக 2023 ஆம் ஆண்டு மட்டும் 42 ஆயிரம் அமெரிக்கர்கள் கொலை யாகியுள்ளதாக துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பக தரவுகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் அரசியலை அந்த நாட்டின் கார்ப்ப ரேட்டுகள் குறிப்பாக ஆயுத நிறுவனங்களே தீர்மானித்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஆதிக்கத்தால் பல நாடுகளில் போரை திணித்துள்ளது அமெரிக்கா.இதன் பின்னணியில் அமெரிக்க பொருளாதாரத்தில் (போர் பொரு ளாதாரம்) ஆயுதங்கள் முக்கியப் பங்கு வகித்து வரு கின்றன.
இந்த ஆயுதப் பொருளாதாரம் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள பள்ளிகளிலும் பொது இடங்களிலும் திடீர் திடீரென துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடுகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது.
2023 ஆம் ஆண்டு மட்டும் 42,000 மக்கள் இந்த துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளதாக அமெரிக்க துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவித் துள்ளன. இது போன்ற துப்பாக்கிச் சூட்டில் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் 1,600 பேர் படுகொலையாகி யுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 23,760 நபர்கள் துப்பாக்கி மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 18,507 பேர்கள் எந்த காரணமும் இன்றியும் தற்காப்புக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் பலியாகியுள்ளதாக தரவுகள் தெரி விக்கின்றன.