வாஷிங்டன், ஜூலை 1- வேலை நிறுத்தம் செய்வதற்கு ஒரு வார காலம் முன்பாக வெளி யிட வேண்டிய அறிவிப்பை சரக்கு களைக் கொண்டு சேர்க்கும் அமெ ரிக்க ஊர்தி ஓட்டுநர்கள் வெளி யிட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் சரக்குப் போக்குவரத்தைக் கையாண்டு கொண்டிருக்கும் அமெரிக்க பெரு நிறுவனமான யுபிஎஸ் கப்பல் நிறு வனம், தனது ஊழியர்களுக்கு உரிய ஊதிய உயர்வை வழங்கவில்லை. விலைவாசி கடுமையாக உயர்ந் துள்ள நிலையில், தங்களுக்கு வழங் கப்பட்டு வரும் ஊதியம் போதாது என்று அந்நிறுவனத்தின் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் தங்கள் கோரிக்கையைக் கேட்க நிறுவனம் தயாராக இல்லாததால், வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கப்பல் நிறுவனத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்கள் பணி யாற்றி வருகிறார்கள். ஒரு வலுவான ஊதிய முன்மொழிவை நிறுவனம் முன்வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகிறார்கள். பேச்சு வார்த்தைகள் நடந்தபோதிலும், தற்போதுள்ள விலை உயர்வைத் தாக்குப் பிடிக்கும் வகையில் ஊதிய உயர்வை நிறுவனம் முன்வைக்க வில்லை.
இதனால், பேச்சுவார்த்தை யில் கலந்து கொண்ட தொழிலாளர் களின் பிரதிநிதிகள், நிறுவனம் தெரி விக்கும் முன்மொழிவுகளை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு வெளி யேறி விட்டார்கள். தங்கள் வேலைநிறுத்த அறிவிப் பில், “கப்பல் நிறுவனத்தில் பணியாற் றும் 3 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர் களுக்கு வலுவான ஊதிய உயர்வு முன்மொழிவைத் தரும் வகையில் பொறுப்பாக நிறுவனம் நடந்து கொள்ள வேண்டும். நல்ல மற்றும் கடைசி முன்மொழிவை நிறுவனம் தொழிலாளர்களின் முன்னால் வைப்பது நல்லது. அமெரிக்க வர லாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் வேலை நிறுத்தம் நடக்கப் போவது உறுதி. அதைத் தடுக்க முடியாது” என்று தொழிற்சங்கத் தலைவரான சீன் ஓ பிரியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களி டம் பேசிய அவர், “நிறுவனத்தில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரி கள் ஆண்டுக்கு கோடிக்கணக்கான டாலர்களை ஊதியமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இந்த நிறு வனத்தின் வர்த்தகம் நடப்பதற்குக் காரணமாக இருக்கும் ஆயிரக்கணக் கான ஊழியர்களைப் பற்றிக் கவ லைப்படவில்லை. பணியில் இருக் கும்போது தேவைப்படும் அடிப்படை யான தேவைகள் பற்றித் தரப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை” என்றும் குற்றம் சாட்டினார்.