world

img

அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு 22 பேர் பலி

அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் புதன்கிழமையன்று லூயிஸ்டன் எனும் பகுதியில்   ராபர்ட் கார்டு என்ற நபர் ஏ.ஆர் -15 ரக துப்பாக்கியால் 3 வெவ்வேறு இடங்களில் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். இச் சம்பவத்தை யடுத்து ராபர்ட் கார்டு  வியாழனன்று நகர காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டார். 

புதனன்று மெய்ன் நகரில் உள்ள  பௌலிங் தெரு, வால்மார்ட், மதுபான விடுதி ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 60 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்ததாகவும் 22 நபர்கள் கொல்லப்பட்டதாகவும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அனைவரும் மெய்ன் நகர மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர் என நகர காவல்துறை தெரிவித்தது.

சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டறியப்பட்ட 40 வயதான ராபர்ட் கார்டை நகர காவல்துறை தீவிர தேடுதலுக்குப் பிறகு வியாழனன்று சுட்டுக் கொன்றது.

அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் 

அமெரிக்க ஆவணக் காப்பகக் குறிப்பின்படி 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை  25,198 நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் கொலையாகியுள்ளனர். இவர்களில் 170 பேர் குழந்தைகள், 879 பேர் பதின்ம பருவத்தினர் ஆவர்.