world

img

அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைய திட்டம்

யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை இணைக்க 2011 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு அமெ ரிக்காவும் அதன் கூட்டாளி இஸ்ரேலும் யுனெஸ்கோவிற்கு நிதி அளிப்பதை நிறுத்திவிட்டன.மேலும் நீண்ட காலமாக யுனெஸ்கோ, தனக்கு எதிராக செயல்படுகிறது என இஸ்ரேல் குற்றம் சாட்டி இருந்தது. தற்போது யுனெஸ்கோ அமைப்பில் சீனாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதால் அமெரிக்காவால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.மேலும் உலகளவில் அறிவியல் தொழில் நுட்பம், பொருளாதாரம் என அனைத்து துறையிலும் சீனா அபரி மிதமான வளர்ச்சி அடைந்துள்ளது அமெரிக்கா வின் மேலா திக்கத்திற்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதும் செயற்கை நுண்ண றிவு மற்றும் தொழில் நுட்ப கல்விக்கான யுனெஸ்கோ கொள்கை வகுப்பில் அமெரிக்கா சென்ற பிறகு சீனா அந்த இடைவெளி யை நிரப்பி வருகிறது.

எனவே அதை முறியடித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் யுனெஸ்கோவில் இணைவ தாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கு நிலுவைத் தொகை ரூ.600 மில்லியன் டாலருக்கும் மேல் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.வளங்கள் மற்றும் மேலாண்மை துணைச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா யுனெஸ்கோவில் இணைவதற்கான விருப்ப கடிதத்தை கடந்த வாரம் யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலேயிடம் ஒப்படைத்தார். யுனெஸ்கோவுக்கு அதிக நிதி கொடுத்த நாடான அமெரிக்கா மீண்டும் இணைய உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறவேண்டும்.இதற்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் நடைபெறும்‌. அமெரிக்காவை மீண்டும் இணைப்பதற்கான யுனெஸ்கோ வின் முயற்சியை எங்கள் நாடு பாராட்டுகிறது என யுனெஸ்கோ வுக்கான சீன தூதர் ஜின் யாங் தெரிவித்தார்.அதே போல ஒரு சர்வதேச அமைப்பில் உறுப்பினராக இருப்பது சாதாரண விசயம் அல்ல. அமெரிக்கா திரும்பி இணைய விரும்பும் இதே வேளையில் அமைப்பின் நோக்கம் மற்றும் இலக்குகளை ஏற்றுக் கொள்கிறது என நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறினார்.