மக்கள் எதிர்ப்பு
போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பப் போவதாக ஜெர்மனி அறிவித்ததும், அது குறித்த விவாதங்கள் எழுந்தன. மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கணிப்பில், “64 விழுக்காடு ஜெர்மனி மக்கள் போர் விமானங்கள் அனுப்புவதை ஏற்றுக் கொள்ளவில்லை. வெறும் 23 விழுக்காட்டினர் மட்டுமே அனுப்புவதை சரி என்று சொல்லியிருக்கிறார்கள். 13 விழுக்காட்டினர் தங்கள் கருத்தைப் பதிவு செய்து கொள்ளவில்லை” என்று தெரிய வந்திருக்கிறது. மாநாடு பற்றிக் கருத்து தெரிவித்த சில வல்லுநர்கள், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கு எதிராக ஒரு அணிச் சேர்க்கையை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். நேட்டோவை விட்டு வெளியில் இருக்கும் நாடுகளின் கருத்தையும் தங்களுக்கு சாதகமானதாகத் திருப்பவே, பிற நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகளை வரவழைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மூனிச், பிப்.21- நேட்டோவின் நடவடிக்கைகளுக்கு எதிராக வும், குறிப்பாக உக்ரைனுக்கு ஆயுத விநி யோகத்தை அதிகரிப்பதற்கான அதன் செயல்பாட்டைக் கண்டித்தும் ஜெர்மனியின் மூனிச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பெருந்திரள் பேரணி நடைபெற்றது. மூனிச்சில் 59ஆவது பாதுகாப்பு மாநாடு நடை பெற்று வருகிறது. பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியை முன்னிறுத்தும் நடவடிக்கையாகவே இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். நேட்டோ உறுப்பு நாடுகள் மட்டு மில்லாமல் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இருந்தும் பிரதிநிதிகளை வர வழைத்திருக்கிறார்கள்.
ஆனால், நேட்டோவின் கருத்தை நடைமுறைப்படுத்தவே அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சமூக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் போர் வெறியைத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கும் அமைப்புகள் மூனிச் நகரில் குவிந்தன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்கு வதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். பேரணியாக வலம் வந்த இவர்கள், அமெரிக்காவை மைய மாக வைத்து இயங்கும் உலக அமைப்பு தவ றானது என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வலம் வந்தனர். நகரத்தின் மையப்பகுதியில் குழுமிய மக்கள், பேரணியாகச் சென்று வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரேக்க மற்றும் ரோமன் சிற்பங்கள் உள்ள அருங்காட்சியகத்தின் முன்பாகத் திரண்டனர். மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டி ருந்த வேளையில், மாநாட்டில் பேசியவர்கள் ஜெலன்சி தலைமையிலான உக்ரைன் அரசுக்கு குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத் திட்டங்களின் அடிப்படையில் ஆயுதங்களை வழங்கவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். தாமதப்படுத்தா தீர்கள் என்று ஜெலன்ஸ்கி சொல்லி வருவதையும் பலர் நினைவுபடுத்தியிருக்கிறார்கள். பகுதி களில் தனது கால்களை நன்றாக ஊன்றியபடி ரஷ்யா நிற்கத்தொடங்கிவிட்டது என்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘‘நம் மீது நம்பிக்கை இல்லை’’
உலக அளவில் மேற்கத்திய நாடுகள் மீதான நம்பிக்கை வெகு வேகமாகக் குறைந்து வருகிறது என்று பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இது பற்றி மூன்று நாள் மாநாட்டில் பேசிய அவர், ‘‘சர்வதேச சமூகம் சமச்சீரற்ற முறை யில் தற்போது இருக்கிறது. இதனால் தெற்கு நாடுகள் நம்மை நம்பவில்லை’’ என்று குறிப்பிட்டார். இவரது கருத்தை பல்வேறு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ஆமோ திக்கும் வகையில் பேசினார்கள். தெற்குலக நாடுகளின் நிலைமை இதுவரை யில் வேறு மாதிரியாக இருந்து வந்தது என்று கூறும் அறிக்கை, தங்கள் மீதான மேலாதிக்கத் தை ஏற்றுக் கொள்பவர்களாகவே இருந்தனர் என்றும், ஆனால் தற்போது பல்வேறு நாடுகள் அத்தகைய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பல நாடு களின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் நேட்டோ இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.