ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிய கறுப்பினத்தவர்கள் “துனிசியாவில் மக்கள்தொகையை அதிகரிக்கின்றனர் என்றும் அவர்கள் இன கலப்பை ஏற்படுத்தி துனிசியாவை “முழுமையான ஆப்பிரிக்க” நாடாக மாற்றிக் கொண்டு உள்ளனர் என்றும் வன்முறை மற்றும் குற்றச்சம்பவங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என்றும் பாசிட்டுகளின் மரபு மாறா மல் கூறி துனிசிய ஜனாதிபதி கைஸ் சையத் நாட்டிற்குள் இன வெறியை தூண்டி விட்டுள்ளார். துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடலோர நகரில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு உப சஹாரா ஆப்பிரிக்கா மக்கள் புலம் பெயர்ந்து செல்கின்றனர். அதாவது மத்திய தரைக்கடலை இங்கிருந்து கடக்கின்றனர்.இதன் காரணமாக சில ஆயிரம் உப சஹாரா ஆப்பிரிக்க மக்கள் அங்கு புலம் பெயர்ந்து வந்துள்ளனர்.அவர்களுக்கு எதிராக தான் இந்த இனவெறி தாக்குதலை தொடுத்து வருகிறார் துனிசிய அதிபர். கடந்த 38 ஆண்டுகள் இல்லாதவகையில் துனிசியாவின் பணவீக்கம் 8.3 சதவிகிதம் அதி கரித்து மக்கள் வாழமுடியாத மிக மோசமான சூழலை எதிர் கொண்டு வருகின்றனர்.வேலை வாய்ப்பு சதவீதமும் அதலபாதாளத்திற்கு சரிந்துள்ளது.இவ்வாறு மோசமடைந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகள், அடிப்படை விநியோக பற்றாக்குறை, அதி கரித்து அரச பயங்கரவாதம், வறட்சி மற்றும் காட்டுத்தீ மற்றும் உலகப் பொருளாதார அமைப்பில் துனிசியாவின் துணைப் பங்கு என நாடு எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனை களில் இருந்து துனிசிய மக்களை திசை திருப்பும் வகையில் மக்கள் நலன் காக்காமல் ஆப்பிரிக்க மக்களுக்கு எதிராக பிரிவினைவா தத்தை தூண்டி விட்டதோடு எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மீதும் கெடுபிடி தாக்கு தலை தொடுத்து துனிசியாவின் நெருக்கடியை மறைத்து வருகிறார்.
கடல் தண்ணீரை பருகும் கொடுமை
துனிசிய இராணுவம் இனவெறியோடு ஆப்பிரிக்க மக்களை லிபியா மற்றும் அல்ஜீரிய எல்லையில் உள்ள பாலைவனத்தில் தள்ளி விடுகிறது.அதன் பிறகு அம்மக்கள் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் தண்ணீர் உணவு ஏதும் இன்றி பல நாட்கள் பாலைவனத்தின் கடும் வெயிலில் நடந்து லிபியாவிற்குள் செல்லும் அவர்களுக்கு சில தனிநபர்களால் தண்ணீர் கொடுக்கப்படுகிறது என்றும் இந்த உதவியை கூட துனிசியா செய்ய முன் வர வில்லை என்றும் தப்பி பிழைத்த மக்கள் தெரி விக்கின்றனர்.இதே போல மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்லும் மக்கள் கடல் தண்ணீரை பருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆகஸ்ட் 9 ஆம் தேதி மட்டும் பாலைவனத் தில் தாங்க முடியாத வெப்பத்தால் மரணம் அடைந்த குழந்தைகள் உட்பட 27 நபர்களின் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.தினமும் 150 பேர் பாலை வனத்தை கடந்து லிபியாவிற்குள் வருவதாக லிபிய நாளிதழ்கள் தெரிவித்துள்ளன. அதிபர் சையத் தூண்டிவிட்ட இனவெறியால் பலநூறு பேர் நாள்தோறும் பாலைவனத்தில் கொடூரமாக கொலையாக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பாதி உயிரோடு பாலைவனத்தை கடக்கும் ஆப்பிரிக்க மக்கள் இரு நாட்டு ராணு வத்திடமும் பாலியல் வன்கொடுமைகள், தாக்கு தல்கள் என கொடூரமான தாக்குதல்களை எதிர் கொண்டு வருகின்றனர். துனிசிய ராணுவ வீரர்கள் கம்பியால் ஒரு பெண்ணின் முகத்தை தாக்கி அவரது அனைத்துப் பற்களையும் பிடுங்கி உள்ளனர் என பாலைவனத்தை கடக்கும் பொது மக்கள் எதிர் கொள்ளும் அடக்கு முறைகளை அல் ஜஸீரா செய்தி நிறுவனம் கூறியுள்ளது. துனிசியாவில் உள்ள முற்போக்கு மற்றும் இடதுசாரி குழுக்கள் ஜனாதிபதியின் இனவெறி நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் புலம்பெயர்ந் தோரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான கொள்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள் ளது. இதனால், துனிசியாவில் தங்கி இருந்த புலம்பெயர்ந்தோரும் கடலைக் கடந்து ஐரோப்பா வுக்குள் நுழைய முயலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீப ஆண்டுகளாக லிபிய துனிசிய மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இடம்பெயர்ந்த மக்களின் மையமாக உருவெடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் இந்த இரு நாடுகளிலும் புலம்பெயர்ந் தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. (ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பத்தில் லிபியாவில் ஒரு எல்லைக் கட்டுப்பாட்டு ஆட்சிக்கு நிதியளித்தது, இப்போது துனிசியாவுடன் அதன் எல்லைகள் வழியாக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதி களை கட்டுப்படுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளது.)