லண்டன், மே 7- பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் ஆட்சி யில் உள்ள வலதுசாரி ஆளுங்கட்சி யான கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிராக அமைந்துள்ளன. பல ஆண்டுகளாக இல்லாத பொரு ளாதார நெருக்கடியில் பிரிட்டன் சிக்கியிருக்கிறது. உக்ரைன் விவ காரத்தில் அமெரிக்காவைப் பின்பற்றி எடுத்த முடிவுகள், கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. பிரதமர்களை மாற்றி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வேலை களும் வெற்றி பெறவில்லை. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு, அதை சமாளிக்க இயலாத வகையிலான ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். இது உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது. 230 கவுன்சில்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சிக்கு 71 கவுன்சில்களில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. கடந்த முறையை விட 22 கவுன்சில் களில் கூடுதலாக வெற்றி பெற்றிருக் கிறார்கள். ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 33 கவுன்சில்கள் கிடைத்துள்ளன. கடந்த முறையை விட 48 கவுன்சில்கள் குறைவாகக் கிடைத்திருக்கிறது. 29 கவுன்சில்களில் வெற்றி பெற்றுள்ள தாராளவாத ஜனநாயகக் கட்சி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பசுமைக் கட்சி ஒரு கவுன்சிலில் வெற்றி பெற்றிருக்கிறது. பிறர் 95 கவுன்சில்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இன்னும் ஒரு கவுன்சிலுக்கான முடிவு வெளிவர வேண்டியுள்ளது.
கவுன்சிலர்களின் எண்ணிக்கையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும் சரிவைக் கண்டிருக்கிறது. 960 இடங்களை இழந்திருக்கிறார்கள். 2 ஆயிரத்து 652 இடங்களில் தொழி லாளர் கட்சியும், 2 ஆயிரத்து 287 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 1,615 இடங்களில் தாராள ஜனநாயக வாதிகளும், 481 இடங்களில் பசுமைக் கட்சியும், 987 இடங்களில் பிறரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சர் ஜான் கர்டிஸ் போன்ற அரசியல் நிபுணர்களோ, வேலை முடிந்துவிட்டது என்று தொழிலாளர் கட்சி இருந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கக்கூடிய அளவில் கட்சிக்கு ஆதரவு இருக்கிறதா என்ற கேள்வியை அவர் கள் எழுப்புகின்றனர். தற்போதைய நில வரப்படி பார்த்தால், அடுத்த தேர்த லில் 35 விழுக்காடு வாக்குகளை தொழி லாளர் கட்சி பெறும். ஆளும் வலது சாரிகளுக்கு 26 விழுக்காடு கிடைக்கும். முழுப் பெரும்பான்மைக்கு இது போதாது என்று அவர்கள் கருது கிறார்கள்.
தங்கள் கட்சிக்குக் கிடைத்துள்ள பலத்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ரிஷி சுனாக், தொழிலாளர்கள் கட்சிக்கு ஒன்றும் பிரமாதமான வெற்றி கிடைத்து விடவில்லை என்று சமாளித்துள்ளார். ஆனால் கட்சிக்குக் கிடைத்துள்ள இந்த மோசமான தோல்விக்கு ரிஷி சுனாக் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர்கள் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் ஆகியோ ருக்கு நெருக்கமான கட்சிக்காரர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கி யுள்ளனர். எந்த மாற்றத்தையும் ரிஷி சுனாக் கொண்டு வந்துவிடவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். அடைக்கப்பட்டிருந்த கதவுகளை மக்கள் ஊதித்தள்ளி விட்டார்கள் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார். ஆனால், பரந்துபட்ட இடதுசாரி ஒற்றுமை என்ற தேவை இப்போதும் பொருத்தமாகவே உள்ளது. அதை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று இடதுசாரி அரசியல் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.