world

img

போதைப்பொருள் எதிர்ப்பு புதிய சர்வதேசக் கொள்கைக்கு அழைப்பு

அமெரிக்காவின் போதை கலாச் ்சாரத் தாக்குதலாலும் போதைப் பொருள் கடத்தல்  மாபியா கும்பல்களின் வன்முறைகளாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் இறை யாண்மையும்  முன்னேற்றமும் பெரும் பாதிப்பை  சந்தித்து வருகிறது. இதன்மூலம் அமெரிக்கா பல்வேறு பயன்களை அடைகிறது. கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் மெக்சிகோ போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் போதைப்பொ ருள் கடத்தல் மற்றும் கடத்தல் கும் பல்களால் தொடர்ச்சியான வன் முறையை எதிர்கொள்கின்றன. அத்துடன் பிற அண்டை நாடுகளிலும் போதைப்பொருள் தொடர்பான வன்முறை ஒரு முக்கிய சமூகப் பிரச்ச னையாக மாறியுள்ளது. இந்நிலையில் கொலம்பிய ஜனாதி பதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் மெக்சிகோ  ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தலை மையில் போதைப்பொருட்கள் குறித் தான  லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின்  மாநாடு செப்டம் பர் 7 முதல்  9 வரை  கொலம்பியா வில் உள்ள  கலி நகரில்  நடந்தது. மாநாட் டில் 19 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று போதைப்பொருள் நுகர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்ப தற்கான வழிகளை விவாதித்தனர்.  அமெரிக்கா தொடுத்துள்ள போதைப் பொருள் கலாச்சாரத் தால் ஆண்டு தோறும் ஒரு லட்சத் துக்கும் அதிகமான இளைஞர் கள் உயிரிழக்கின்றனர். இளைஞர்க ளுக்கு  கல்வி, வேலைவாய்ய்பு மற்றும் நல்ல ஊதியம் ஆகியவையே தேவை. ஆனால்  அவர்கள் போதைக் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கப் படுகிறார்கள்.

இந்நிலையில் போதைக்கு எதி ரான இந்த போரை நாம் நடைமுறை யில் உள்ள  வடிவிலேயே தொ டர்ந்தால் மேலும் லட்சக்கணக்கான மக்களை இழக்க நேரிடும். எனவே நமது  நடவடிக்கைகளில் சில மாற்றங் களை கடைப்பிடிக்க வேண்டும் என கூறினார் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ. மேலும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையே போதைக் கலாச்சாரத்திற்கு  எதிரான கூட்டணியை முன்வைத்தார். போதைப்பொருள் கடத்தலுக்கு எதி ரான போராட்டத்தில் ஒரு ஒருங்கி ணைந்த குரலைக் கொண்டு வர,  ராணுவம் தலையிடவேண்டிய  சட்ட ஒழுங்கு  பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக அதை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.  போதைக் கலாச்சாரம் பரவக் காரணமான சமத்துவமின்மை, வறுமை, வேலையின்மை,  வன்முறை கள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதன் மூலமும் ஜனநாயகத்தை உறுதிப் படுத்துவதன் மூலமும் இந்த போதைக் கலாச்சாரத்தை  எதிர்கொள்ள இயலுமென அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தல்,  ஆயுதங்கள் கடத்தல் ஆகியவை  எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக உள்ளது. மற்றும் சட்ட விரோதமாக  மரம் வெட்டுதல், ஆட் கடத்தல், புலம்பெயர் மக்களை கடத்து தல், பணமோசடி மற்றும் ஊழல் ஆகிய பிரச்சனைகளை களைய  வேண்டிய தன் அவசியத்தையும் மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் ஒப்புக்கொண்டன.