நியூயார்க், நவ.15- உலக மக்கள்தொகை 800 கோடி யாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2080- ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை யில், உலக மக்கள்தொகை 800 கோடியாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு நிலவரப்படி உலக மக்கள் தொகை 7,999,959,816 ஆக உள்ளது. செவ்வாயன்று உலகின் எதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கும் குழந்தை ஒன்று உலகின் மக்கள்தொகையை 800 கோடியாக அதிகரிக்க செய்திருக்கலாம். 1950-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 200 கோடியாக இருந்தது. அதனை ஒப்பிடுகையில் தற்போது உலக மக்கள்தொகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், சமீப ஆண்டுகளாக கருவுறுதலில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக 2050 ஆம் ஆண்டு மக்கள்தொகை 0.5 சதவீதமாக வீழ்ச்சியடையக் கூடும்.
இருப்பினும் 2050-ஆம் ஆண்டு மக்கள்தொகை 900 கோடி யாகவும் 2080-ஆம் ஆண்டு மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும். மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பை ன்ஸ், தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் இருந்துதான் வரப் போ கிறது. என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கூறும்போது, “இந்த வேளையை பன்முகத்தன்மை மற்றும் முன்னேற்றங்களைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாக நாம் எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மனித குலத்திற்கான பொறுப்பையும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.” என்று தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனா வின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. எனினும் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா சில ஆண்டுகளில் மிஞ்சி விடும் என்றும் கூறப்படுகிறது. உலக மக்கள்தொகை ஏழு பில்லியனிலிருந்து எட்டு பில்லி யனை எட்ட 12 வருடங்கள் ஆகி யுள்ளது. இது ஒன்பது பில்லியனை எட்டுவதற்கு சுமார் 15 ஆண்டுகள் ஆகும். ஒன்பது பில்லியனை எட்டுவதற்கு 15 ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுவது, “உலக மக்கள்தொகையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் குறைந்து வரு வதற்கான அறிகுறியாகும்”.