world

img

10 அமெரிக்க தூதரக அதிகாரிகள்  ரஷ்யாவிலிருந்து வெளியேற்றம்....

மாஸ்கோ:
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாகக்கூறி ரஷ்யாவைச் சேர்ந்த 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.மேலும் ரஷ்யாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 10 பேர் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டது.ரஷ்யாவுடன் மோதலை விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி புதினை நேரில்சந்தித்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஷ்யா,அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் தூதரக அதிகாரிகள் 10 பேரை ரஷ்யா அதிரடியாக நாட்டை விட்டு வெளியேற்றியது.

அதுமட்டுமின்றி அமெரிக்காவைச் சேர்ந்த மூத்தஅதிகாரிகள் 8 பேரின் பெயரை தடை செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்த 8 பேரும் ரஷ்யா வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.இதில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட், மத்திய புலனாய்வு இயக்குநர் கிறிஸ்டோபர் வேரே, அமெரிக்க உள்நாட்டு கொள்கை ஆலோசகர் சூசன் ரைஸ் ஆகியோர் உள்ளனர்.

;