இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு திங்கள் முதல் அறிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமொன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 7-ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம்.மார்டினிஸ் ஆகியோருக்கும், நேற்று (அக்.8) வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமா கிடகவா, ரிச்சர்டு ராப்சன் மற்றும் உமர் யாகி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் எழுத்தாளரின் கவர்ச்சியான தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.