world

img

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்பு!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டதாக ஹமாஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது கொடூர தாக்குதலை நடத்தியதில் இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பாலஸ்தீன கடலோர பகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட 4 நாள் போர் நிறுத்தம், மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.