காசா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியாகியுள்ளனர்.
தெற்கு காசா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் தெரிவித்தார்.
வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக பஸ்ஸல் கூறினார். அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அல்-ஜவாய்தாவின் மையப் பகுதியிலும், தெற்கில் உள்ள கான் யூனிஸிலும் இறப்புகள் பதிவாகியுள்ளதாக பஸ்ஸல் தெரிவித்தார்.