world

img

தீக்கதிர் உலக செய்திகள்

வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்   உக்ரைனால் தாமதமாகிறது

உக்ரைன்- ரஷ்யா போரில் கொல்லப்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்களில் 1,212 பேரின் உடல்களை ரஷ்யா அனுப்பியுள்ளது. ஆனால்  உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தாததால் இன்னும் உடல்கள் பரிமாற்றம் நடக்கவில்லை என அந்நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அலெக்சாண்டர் சோரின் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைனின் செயலால் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான செயல்பாடுகள் தாமதமாகிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லெபனான் மீது  இஸ்ரேல் குண்டுவீச்சு 

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இத்தாக்குதலில் மூன்று பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மிக மோசமாக இருப்பதாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் சிரியா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை  400 சதவீதம் அதிகரிக்க வேண்டுமாம்

நேட்டோ ராணுவ அமைப்பின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு களை “400 சதவீதம் அதிகரிக்க” வேண்டும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆயி ரக்கணக்கான கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகள், லட்சக்கணக்கான பீரங்கி குண்டுகள் நேட்டோ அமைப்பிற்கு தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில் ராணுவத்திற்கு அதிக முதலீடு செய்யச் சொல்வது முட்டாள் தனமா னது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

டிரம்பின் வரி மசோதாவுக்கு அமெரிக்க சபாநாயகர் ஆதரவு

டிரம்ப்பின் வரி மசோதாவிற்கு (பிக் பியூடிபுள் பில் ) ஆதரவான கருத்துக்களை அமெரிக்க சபாநாயகர் மைக் ஜான்சன் தெரி வித்துள்ளார். குடியரசுக் கட்சியின் எம்பிக்கள் டிரம்ப்பின் வரி மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என எலான் மஸ்க் அழைப்பு விடுத்தி ருந்தார். இந்நிலையில் மசோதா சாதாரண அமெரிக்கர்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்று   மைக் ஜான்சன் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் டிரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். 

டிரம்ப்பின் நடவடிக்கையால்  தீவிரமடையும் போராட்டம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் குடி யேற்ற சோதனைக்கு எதிரான போ ராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இந் நிலையில் மாகாண ஆளுநர் சூழ்நிலையை முறையாகக் கையாளவில்லை என டிரம்ப் ராணு வத்தை அனுப்பினார். இது தவறான போக்கு; இந்த நடைமுறை போராட்டக்காரர்களை மேலும் கோபமடையச் செய்யும் என எச்சரிக்கை  விடப்பட்டது. அவ்வாறே தற்போது அந்நகரின் நிலைமை மோசமடைந்துள்ளது. எனினும் மாகாண காவல் துறை நிலைமையை கட்டுக் குள் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

வுல்ஃப்ஸ்பீட் நிறுவனம் திவால் அறிவிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்க செமிகண்டக்டர் நிறுவனங்கள்

வாஷிங்டன், ஜூன் 9- அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிலிக் கான் கார்பைட் (SiC) வேஃபர் தயாரிப்பு நிறுவன மான வுல்ஃப்ஸ்பீட் (Wolfspeed) திவால் நிலை யை அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு உலகளாவிய செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறையில் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவை தளமா கக் கொண்டு இயங்கி வருகிற குறைக்கடத்தி நிறுவ னங்களுக்கு இது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.  சிலிக்கான் கார்பைட் வேஃபர் என்பது அதிக வெப்பம், அதிக மின் அழுத்தத்தை தாங்கி சிறப்பாக இயங்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட பண்பு களைக் கொண்ட ஒரு சிறப்பு குறைக்கடத்தி ஆகும்.  தற்போது இந்த குறைக்கடத்தி தான் மின்சார வாக னங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், 5 ஜி தொழில் நுட்பம், அடுத்த தலைமுறை பவர் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உருவாக்க மிகவும் இன்றியமை யாததாக உள்ளது. வுல்ஃப்ஸ்பீட் நிறுவனம் இந்த குறைக்கடத்தி கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்து வந்த உலகின் முதன்மையான நிறுவனமாக அறியப் படுகிறது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.   தன்னுடைய வளர்ச்சியை மேலும் அதிகரிக்க பல கோடி டாலர்களை இந்த நிறுவனம் கடன் வாங்கி முதலீடு செய்துள்ள நேரத்தில், சிச்சுவான் செமி கண்டக்டர் மற்றும் டாங்கேப்ளூ ஆகிய இரு சீன நிறு வனங்கள் இத்தகைய தரமான குறைக்கடத்திக ளை உற்பத்தி செய்து உலகச் சந்தையில் மிக குறை ந்த விலைக்கு விற்பனை செய்யத் துவங்கின.  மேலும் சிலிக்கான் கார்பைட் வேபர் தயாரிப் பில் வுல்ஃப்ஸ்பீட் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாளராக உருவாகின. இதனால் கடந்த சில வாரங்களாகவே இந்நிறுவனம் போட்டிய சமாளிக்க முடியாமல் திணறி வந்தது.     இந்நிலையில் தான் வுல்ஃப்ஸ்பீட் நிறுவனம் திவால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால்  வுல்ஃப்ஸ்பீட் நிறுவனம் மட்டுமின்றி அந்நிறுவனத்தில் முதலீடு செய்த மற்றும் ஒப்பந்தங்கள் போட்ட இந்தியாவின் முரு கப்பா நிறுவனம் ஜப்பானின் ரெனேசாஸ் எலக்ட்ரா னிக்ஸ் உட்பட பல நிறுவனங்கள் அதிர்ச்சிக்குள் ளாகியுள்ளன.  அதுமட்டுமின்றி குறைக்கடத்தி துறைகளில் சீன நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கி வரு கின்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக் கடத்தி நிறுவனங்களை கலக்கம் அடைய செய்துள்ளது.