அரபு நாடுகளுடன் தன் குடும்ப நிறுவனங்களின் வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய டிரம்ப்
ரியாத்,மே 30- அரபு நாடுகளுக்கு அரசுமுறை பயணமாகச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தன் குடும்ப நிறு வனங்களுக்கான வணிக ஒப்பந்தங் களை ஏற்படுத்தியுள்ளார். மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் என மூன்று நாடு களுக்கு அரசு முறை பயணமாக மேற் கொண்டார். இந்த பயணத்தின் போது பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியதுடன் பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார். இப்பயணத்தில் அமெரிக்காவிடம் இருந்து 142 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவூதி அரேபியா வாங்க வேண்டும் என்ற ஒப்பந்தமும், கத்தார் அரசுடன் 1.4 பில்லியன் டாலர்களுக்கு ஆயுத ஒப்பந்தமும், அமெரிக்காவில் சுமார் 600 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தையும் அமெரிக்கா ஏற்படுத்தியது. இந்த பயணத்தின் போது டிரம்ப் குடும்பத்தின் தனிப் பட்ட வணிக நலன்களுக்கான ஒப்பந்தங்களையும் அவர் மேற்கொண்டுள்ளார். டிரம்பின் மகனான எரிக் டிரம்ப், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் 80 மாடி கட்டடம் கட்டத் திட்டமிட்டுள்ளார். அதற்கான பேச்சு வார்த்தையை அந்நாட்டுடன் நடத்தியுள்ளார். இது போல கத்தாரில் 5.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கோல்ஃப் கிளப் கட்டுவதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். இப்பயணத்தில் கத்தார் அரசு சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான போயிங் விமானத்தை டிரம்பிற்கு பரிசாகவும் கொடுத்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வருகின்ற சீனாவின் வளர்ச்சி யை தடுத்து அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கத்தை மீண்டும் அதிகப்படுத்தும் நடவடிக்கையாகவே இப்பயணம் நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.