world

img

தீக்கதிர் உலக செய்திகள்

முதியோர் பராமரிப்பில்  மனித ரோபோக்கள் 

அதிக மக்கள் தொகை கொண்ட சீனா இன்னும் சில ஆண்டுகளில் அதிக முதியவர்கள் கொண்ட நாடாக மாற உள்ளது. இந்த சூழலில் அந்நாட்டின் அறிவியல் தொழில் நுட்பத்தை வயதானவர்களை பராமரிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மனித ரோபோக்களை முதியவர்களை பராமரிக்கும் பணியில் செவிலியர்களாக ஈடுபடுத்த உள்ளது. இதற்கான முன்னோடித் திட்டத்தையும் சீனா துவங்கியுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பங்கேற்குமாறு தனியார் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்லாமிய வெறுப்பை அகற்ற திட்டத்தை சரி செய்யவும் 

மக்களிடையே பரப்பப்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்பை அகற்ற ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தை பின்பற்ற இங்கிலாந்து அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈக்வி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூகப் பிளவுகள் நம்பிக்கையைச் சிதைத்து, நாட்டின் ஒற்றுமையை அச்சுறுத்துவதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள் பற்றி பரப்பப்படும் அவதூறுகள், அவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதையும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை 

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலின் “ரகசிய அணுசக்தி நிலை யங்கள்”, ராணுவ நிலைகள் உடனடியாக தாக்கு தலுக்கு உள்ளாக்கப்படும் என ஈரானின் உயர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத் துள்ளது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. அதன் பிறகு சில நாட்களில் இஸ்ரேலின் முக்கிய ஆவணங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக ஈரான் தெரிவித்த நிலையில் தற்போது நேரடியாக அது எச்சரித்துள்ளது.  

பேச்சுவார்த்தை மட்டுமே   அமைதிக்கான பாதை – குட்டரெஸ் 

பேச்சுவார்த்தைகள் மூலமாக உலகளவில் ஒற்றுமையை மேம் படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஐ.நாஅவை ஒரு அடிப்படை நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. பேச்சுவார்த்தை இல்லாத இடத்தில், அறியாமை வெற்றிடத்தை நிரப்புகிறது. பிளவுபட்டுள்ள நமது உலகில் பேச்சுவார்த்தை, புரிதல் மற்றும் நம்பிக்கையின் பாலங்களை உருவாக்குவதற்கு அவசியம் என்றார். 

பிரான்சில் ஆயிரக்கணக்கான  மக்கள் போராட்டம்

காசாவிற்கு உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற கப்பலில் இருந்த கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட 12 பேர்களை இஸ்ரேல் துப்பாக்கி முனையில் கடத்தியது. பிறகு அவர்களை கைது செய்துள்ளதாகவும் அவரவர் நாட்டிற்கு அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தன்பெர்க்கை பிரான்ஸ் மூலமாக அனுப்ப திட்டமிட்டது. அவரை சிறையில் அடைத்து விடக்கூடாது என்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கிரெட்டா அவரது நாட்டு க்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 நீதித்துறை ஒருங்கிணைப்பை முன்னெடுக்கும் சாஹேல் கூட்டமைப்பு : ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ந்து முன்னேறுவதாக பாராட்டு

மாலி, புர்கினா பாசோ, நைஜர் ஆகிய மூன்று நாடுகளின் சாஹேல் கூட்டமைப்பு  (AES) நீதித்துறை ஒருங்கிணைப்பை முன்னெடுத்துள்ளது.  இந்த நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக மே 29-30 தேதிகளில் மாலியின் தலைநகரான பாமாக்கோவில் நடைபெற்ற சாஹேல் நாடுகளின் சட்டத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டு அதிக பாதுகாப்பு கொண்ட  ஒரு சிறை கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல கடுமையான குற்றங்களுக்காக, குற்றம் சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட குற்ற வாளிகள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை உருவாக்கவும், சட்ட தகவல்களை பரிமாறிக்கொள்ளும் தளத்தை அமைக்கவும் முடிவு செய்துள்ளன. நேட்டோ நாடுகள் லிபியாவை அழித்த பிறகு அங்கு தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி விட்டு சென்றன. இத்தீவிரவாதக் குழுக்கள் மூலமாக  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சஹேல் பிராந்திய நாடுகளின் மீது தொடர்ந்து தீவிரவா தத் தாக்குதல்களை மேற்குலக நாடுகள் மறை முகமாக அரங்கேற்றி வருகின்றன.    இந்நிலையில் தான் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றவழக்குகளை விசாரணை செய்ய இந்த நீதி மன்றத்தை உருவாக்க முன் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.  பயங்கரவாதம் மட்டுமின்றி இந்த நீதிமன்றத்தி ற்கு பயங்கரவாதத்திற்கு செல்லும் நிதியுதவி, போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற கடுமையான குற்றங்களை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் ஆப்பிரிக்க நடைமுறை களில் அடிப்படையாக இருக்கும் என்றும், ஏகாதி பத்திய சக்திகளின் பிராந்திய மற்றும் பன்னாட்டு நீதித்துறை அமைப்புகளில்  உள்ள எதிர்மறை யான விசயங்களில் இருந்து விலகி இருப்ப தாகவும் வலியுறுத்துகிறது. 2023 செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட இந்த சாஹேல் கூட்ட மைப்பு  ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தங்களது கூட்டு முயற்சியை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  2025 துவக்கத்தில் இக்கூட்டமைப்பிற்கான பொதுவான கொடி மற்றும் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இக்கூட்டணி, குற்றம் மற்றும் மனித உரிமை குற்றங்களை கவனிக்கும் நீதிமன்றத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இக்கூட்டமைப்பு உரு வாக்கப்பட்ட துவக்கத்தில் முத்தரப்பு பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கான ஒரு கூட்டமைப்பாக இருந்தது. ஆனால் இது படிப்படியாக பொருளாதார மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பு கூட்டணியாக வளர்ந்துள்ளது.  இம்முயற்சியை இடதுசாரிகள், பான்-ஆப்பிரிக்க (ஒன்றுபட்ட ஆப்பிரிக்கா) அமைப்பு கள்  முழு கண்டத்திற்கும் ஒரு முன்மாதிரி என்று பாராட்டி வருகின்றன.