இஸ்ரேல் அமைச்சர்கள் மீது தடை விதிப்பு
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, நார்வே ஆகிய நாடுகள் இஸ்ரேல் அமைச்சர்கள் மீது தடை விதித்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் மீது “பயங்கரவாத வன்முறையைத் தூண்டியதற்காக” இஸ்ரேல் அமைச்சர்கள் இடாமர் பென்-க்விர், பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் தான்
தேர்தல் வெற்றிக்குப் பிறகு டிரம்பை சந்திக்க வந்த ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியில் பிறந்த டொனால்டு டிரம்பின் தாத்தா பிரீட்ரிக் டிரம்பின் பிறப்பு சான்றிதழை பரிசாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து உங்கள் குடும்பமே வெளிநாட்டில் இருந்து தான் வந்துள்ளது. குடியேற்ற கொள்கையின் அடிப்படையில் வெளிநாட்டினர் பலரை தற்போது அநாகரீகமாக நடத்துவதும் நாட்டை விட்டு வெளியேற்றுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என டிரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளுடனான சீனா வர்த்தகம் உயர்வு
ஆப்பிரிக்க நாடுகளுடனான சீனாவின் மொத்த வர்த்தகம் கடந்த 25 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சீனாவுக்கு இடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி 1,16,065 லட்சம் கோடிகளாக (100 பில்லியன் யுவான்) இருந்தது. இது 2024 இல் 24.57 லட்சம் கோடி ரூபாய்களாக (2.1 டிரில்லியன் யுவான்) ஆண்டுக்கு 14.2 சதவீதம் வளர்ந்துள்ளது.
பள்ளியில் துப்பாக்கிச் சூடு குட்டரெஸ் கண்டனம்
ஆஸ்திரியாவின் கிராஸில் பள்ளிக் கூடத்தில் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கண்டித்துள்ளார். மேலும் அந்நாட்டு மக்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
ராணுவ பட்ஜெட்டை அதிகரித்த பாகிஸ்தான்
இந்தியாவுடனான மோதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ செலவினங்களை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இந்த அதி கரிப்பை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த செலவு 7 சதவீதம் குறைக்கப்பட்டு 17.57 டிரில்லியன் ரூபாய் (62 பில்லியன் டாலர்) ஆக இருக்கும். 40 புதிய சீன போர் விமானங்கள் மற்றும் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள செய்தி வெளியான சில தினங்களில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சீனாவின் அரிய கனிமங்களுக்காக இறங்கி வரும் அமெரிக்கா : மீண்டும் வணிக நடவடிக்கைகளை துவங்க உடன்பாடு
லண்டன், ஜூன் 11- சீனா-அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தக நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்வ தற்காகவும் ஜெனீவா பேச்சுவார்த்தையை கடை பிடிக்கவும் ஒரு திட்டமிடல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இரண்டு நாட்களாக சீனா-அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே சுமார் 20 மணிநேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் இதனை அறிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து வர்த்தகப் போரை துவங்கினார். குறிப்பாக சீனாவை முடக்க வேண்டும் என அந் நாட்டின் மீது 145 சதவீத வரிகளை விதித்தார். சீனா வும் பதிலடி வரிகளை விதித்தது. குறிப்பாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய அறிய வகை கனிமங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் அமெரிக்காவில் மின்சார வாகன உற் பத்தியில் முன்னணி வகிக்கும் எலான் மஸ்கின் டெஸ்லா உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சில நெருக்கடிகளை சந்தித்தன. குறிப்பாக உலகின் முன்னணி செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனமான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சீனாவின் சந்தை எங்களுக்கு மிக அவசியமானது என வெளிப்படையாகப் பேசினார். இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல் உலக வர்த்தகத்தையும் பாதித்து வந்த நிலையில் கடந்த மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரமாக வரிகளை குறைத்துக்கொண்டனர். எனினும் அமெரிக்கா வர்த்தகம் அல்லாத துறை களில் சீனாவிற்கு பிரச்சனைகளை கொடுத்து வந்தது. இதே போல சீனாவிற்கு அமெரிக்கா தொ டர்ந்து நெருக்கடி கொடுத்தால் கடுமையான விளை வுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஜெனீவா ஒப்பந்தத்தை அமெ ரிக்கா முறையாக கடைபிடிக்க மறுக்கிறது எனவும் குற்றம் சாட்டியது. சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் படியான நட வடிக்கைகளை முன்னெடுத்து வந்த அதே நேரத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் உடன் வர்த்த கம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டிரம்ப் தொடர் முயற்சிகளையும் எடுத்து வந்தார். இதன் ஒரு பகுதியாக ஜூன் 5 அன்று இரு நாட்டு ஜனாதிபதிகளும் தொலைப்பேசி வாயிலாக உரை யாடல் நடத்தினர். இந்த உரையாடல்களுக்கு பிறகு லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் ஜனாதிபதிகள் தொலைபேசி வழியாக பேசிய போது கொடுக்கப்பட்ட ஒப்புதல்கள் மற்றும் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் எட்டிய முடிவுக ளை செயல்படுத்த ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (framework agreement) இரு நாடுகளும் கருத் தொற்றுமை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் அரிய கனிமவள வர்த்தகம் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க பெருமுத லாளிகளின் சந்தை மற்றும் தொழில் நுட்ப தேவை சீனாவை சார்ந்து இருக்கும் சூழல் காரணமாக டிரம்ப் தனது மேலாதிக்க மனப்பான்மையை சீனாவிடம் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட சூழல் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது.