காசா பட்டினிப் படுகொலை 313 ஆக அதிகரிப்பு
இஸ்ரேல் திட்டமிட்டு உணவுப் பொருட்களை தடுத்து வருவதால் காசாவில் உருவாகியுள்ள பட்டினியால் பலியானவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது. காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 119 போ் சிறுவா்களாவர். இது தவிர காசாவில் உணவு விநியோக மையத்திற்கு உணவு வாங்க சென்ற 17 பாலஸ்தீனர்கள் உள்ளிட்ட 75 க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் சுட்டுக்கொலை செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க ராணுவ வீரர்களை அனுப்பும் வெனிசுலா
வெனிசுலாவிற்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் பணியில் 15,000 ராணுவ வீரர்களை ஈடுபடுத்தியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. வெனிசுலா ஜனா திபதி நிக்கோலஸ் மதுரோ அனைத்து முனைக ளிலும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போராடும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் “கார்டெல் டி லாஸ் சோல்ஸ்” என்ற பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள போதைப்பொ ருள் கடத்தல் அமைப்புடன் அமெரிக்கா இணை ந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
அமெரிக்கா நியூசிலாந்து மீது விதித்த 15 சதவீத வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஆகஸ்ட் 21 அன்று நியூசிலாந்தின் அஞ்சல் துறை அறிவித்தது. இந்த வரி உயர்வு ஆகஸ்ட் 29 முதல் அமலுக்கு வரவுள்ளது. நியூசிலாந்து உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல அஞ்சல் சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தியாவைச் சேர்ந்த 72 பேர் மீது வழக்கு
பிரிட்டனில் பாலியல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் எனவும் இந்த அளவு 257 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அந்நாட்டின் தரவுகள் படி தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021 - 2024 க்கு இடையில் பாலியல் குற்றச்சாட்டிற்காக 72 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அதே காலகட்டத்தில் பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற வெளிநாட்டி னரின் எண்ணிக்கையில் 62 சதவீதம் அதிகமாகும்.
இம்ரான் கானின் கட்சி இடைத்தேர்தலை புறக்கணிக்க திட்டம்
ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (PTI) வரவிருக்கும் இடைத்தேர்த லை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரி வித்துள்ளது. இந்த முடிவு இம்ரான் கானுடன் அக்கட்சி யின் தலைவர்கள் வழக்கறிஞர்கள் நடத்திய ஆலோச னையை தொடர்ந்து எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த மாதம் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர்கள் சிலர் தண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேசிய மற்றும் மாகாண சட்டமன்றங்களின் பல இடங்கள் காலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புரையோடிப்போன ஊழலை எதிர்த்து இந்தோனேசியாவில் மாணவர்கள் போராட்டம்
ஜகார்த்தா, ஆக.27- இந்தோனேசியாவில் ஊழல் புரையோடிப் போயுள்ள நிலையில் அதை எதிர்த்து மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லட்சக்க ணக்கில் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப் படுகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்திய மதிப்பில் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 2024 செப் டம்பர் மாதம் முதல் வீட்டுப் படி என 2.5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் பய ணப்படி உள்ளிட்ட இதர சலுகைகளும், ஆடம்பரச் சலுகைகளும் உள்ளன. அந்நாட்டில் மொத்தமுள்ள 580 நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இத்த கைய அதிக பணம் சார்ந்த சலுகைகள் மாணவர் கள் மக்களிடையே இருந்த அதிருப்தியை தூண்டி பெரும் போராட்டமாக வெடித்துள்ளது. வீட்டுப் படிக்கு வழங்கப்படும் தொகையானது ஒரு இந்தோனேசிய தொழிலாளிக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை ஊதியத்தின் அளவை விட சுமார் 20 மடங்கு அதிகமாகும். வேலையின்மை, பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் அத்தியா வசியச் செலவுகள், வீட்டு வாடகை உள்ளிட்ட பல செலவுகள் உச்சத்தை தொட்டுள்ளன. இந்நிலை யில் அந்நாட்டு அரசு மக்களின் வாழ்வாதாரக் கோ ரிக்கைகளில் கவனம் செலுத்தாமல் உள்ளது. இந்த போக்கு அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கு செய்யப்படும் அதிகப்படியான செலவுகள் மாணவர்களிடையே கடும் கோபத்தை தூண்டி யது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந் நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் ஆயி ரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் கருப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போ ராட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவினர். போராட்டக்காரர்கள் “ஒன் பீஸ்” (One Piece) என்ற ஜப்பானின் அனிமே (anime) தொடரில் வரும் கொடியை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் எனவும் அர சாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் செய் துள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவான கொ ள்கைகள் ராணுவத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையிலான திட்டங்களையும் கண்டித்துள்ளனர்.