world

img

பூமியை தாக்கும் சூரிய புயல்?  நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை  

இன்று சூரிய புயல், பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

சூரியனில் ஏற்படும் சில பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி சூரிய புயல் உருவாகிறது. இந்த சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல், பூமியை நேரடியாக தாக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர் தமிதா ஸ்கோவ் என்ற இயற்பியலாளர் கணித்துள்ளார்.  

இந்நிலையில் இன்று வீரியமிக்க சூரிய புயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய புயல் தாக்கத்தால் செயற்கைக்கோள்கள் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதால் செயற்கைக்கோள், ஜிபிஎஸ் சேவை உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் பல இடங்களில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சூரிய புயலை ஜி என்ற எழுத்தால் அளவிடப்படுகிறது. இதில் ஜி1 என்பது மிதமான புயல் என்பதும் ஜி5 மிகவும் ஆபத்தான சூரிய புயலாகவும் அளவிடப்படுகிறது.  

1859க்கும் 2022 ஆம் ஆண்டுக்கும் இடையே இதுபோன்ற பல சூரிய புயல்கள் பூமியை தாக்கியுள்ளன. ஆனால் அதன் தீவிரம் குறைவாகவே இருந்தது. இப்போது வரும் புயல் தீவிரம் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.