world

img

ஷேக் ஹசீனா நிச்சயமாக நாடு திரும்புவார்: சஜீப் வாசேத் ஜாய் அறிவிப்பு

டாக்கா,ஆக.9-  ஷேக் ஹசீனா நிச்சயமாக நாடு திரும்பு வார் என்று அவரது மகன் சஜீப் வாசேத் ஜாய் தெரிவித்துள்ளார். 

பிடிஐக்கு அளித்த  நேர்காணலில்  அவர் கூறியதாவது: வங்கதேசத்தில் ஜனநாய கம் திரும்பியவுடன்  ஷேக் ஹசீனா நிச்ச யமாக வங்கதேசத்திற்குத் திரும்புவார் என்று தெரிவித்துள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறிய போது இனி வங்க தேசத்துக்கு திரும்ப மாட்டார் என தெரி வித்திருந்தேன். ஆனால் நாடு முழுவதும் உள்ள எங்கள் கட்சியின்  தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும் நடந்த தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொ டர்ந்து  இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எங்கள் மக்களை  தனியாக விடப் போவதில்லை .

ஷேக் முஜிபுர் ரகுமானின் குடும்பத்தி னர்  மக்களையும் கட்சியையும்  கைவிட மாட்டார்கள். இடைக்கால அரசு தேர்தலை நடத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலை யில் ஷேக் ஹசீனா நாடு திருப்பிய பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடு வாரா அல்லது மீண்டும் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்குவாரா,தேர்தலில் போட்டியிடுவாரா என்பதை அவர் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்ட அவர் ஷேக் ஹசீனாவிற்கு பாதுகாப்பு கொடுத்த தற்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் வங்க தேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வும் சர்வதேச கருத்தை உருவாக்கவும், அழுத்தம் கொடுக்கவும் வங்கதேசத்திற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்றும் அந்த நேர்காணலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடைக்கால அரசு 

நோபல் பரிசு பெற்ற வங்கதேச   பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக் கால அரசு வியாழக்கிழமை ஆகஸ்ட் 8 அன்று இரவு 8 மணிக்கு பதவியேற்றது.இந்த புதிய அரசு வங்கதேசத்தில் தேர்தலை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். முகம்மது யூனுஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி  வாழ்த்து தெரி வித்துள்ளார்.