world

உக்ரைன்- ரஷ்யா போர் கள நிலவரம்

  1. உக்ரைனுக்கு தேவையான அளவுக்கு ஆயுதங்கள் தரும் அதே வேளையில் ரஷ்யாவுடன் நாங்கள் நேரடியாக மோத மாட்டோம் என  நேட்டோ பொது செயலாளர் ஸ்டோல்பெர்க் கூறியுள்ளார்.
  2. ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைன் வீரர்களின் உயிரை பலியாக்குவது என்பதே நேட்டோவின் அணுகுமுறை.  இந்த குளிர்காலம் “மக்களின் கோபம் நிறைந்த குளிர்கால மாக” இருக்கும் என ஜெர்மனி உளவுத்துறை அரசுக்கு தகவல் தந்துள்ளது.
  3. ரஷ்யா மீது போடப்பட்ட தடைகள் கார ணமாக எரிசக்தி பற்றாக்குறையும் விலைவாசி உயர்வும் கோபத்தை உருவாக்கிய வண்ணம் உள்ளன.
  4. சில தீவிரவாத அரசியல் அமைப்புகள் இந்த கோபத்தை பயன்படுத்தக் கூடும் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
  5. அமெரிக் காவை நம்பி ஜெர்மனி அரசு தனது மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளது. ரஷ்யாவுக்கான நெதர்லாந்து தூதர் எலிசெபத் எல்லிங்சன் ஒரு விடுதியில் ஏற்பட்ட பிரச்சனையில் தான் ரஷ்யர்க ளை வெறுப்பதாக கூச்சல் போட்டார்.
  6. நெதர்லாந்து அரசு மன்னிப்பு கேட்டாலும் அவர் ரஷ்யாவைவிட்டு வெளியேற வேண்டும் என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.  
  7. மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர் நேஷ னல், உக்ரைன் ராணுவம்  பல மருத்துவ மனைகள் மற்றும் பள்ளிகளை ஆயுதங்கள் வைக்க பயன்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளது.
  8. ரஷ்யாவின் குற்றச்சாட்டு உண்மை என இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அம்னெஸ்டியை உக்ரைன் காட்டமாக விமர்சித்துள்ளது. உக்ரைனுக்கு உண்மை சுடுகிறது.
  9. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் அவர்களிடம் நேரடியாக பேச வேண்டும் எனவும் அதன் மூலம் உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு சீனா நிர்ப்பந்தம் தர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
  10. நான்சி பெலோசியின் தைவான் பயணத்துக்கு பின்னரும் ஜெலன்ஸ்கி இப்படி நினைத்தால் அவருக்கு சர்வதேச அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்றுதான் பொருள்.