world

img

பிரேசில்: கனமழை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது

பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  117 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் மண்ணில் புதைந்தனர். இதைத்தொடர்ந்து மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது. மேலும் பேரை காணவில்லை என அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.