world

காசா மீது இஸ்ரேல் போர் : சில முக்கிய கள நிகழ்வுகள்

u இஸ்ரேலுக்கு எதிராக போர் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்க தொடுத்த வழக்கு ஜனவரி 11/12  தேதிகளில் விசாரிக்கப்படுகிறது. ஈரான் உட்பட பல நாடுகள் தென் ஆப்பிரிக்காவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் இடதுசாரி தலைவர் ஜெர்மி கோர்பின் தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்துள்ளார். இந்த வழக்கை தோற்கடிக்க இஸ்ரேல் ஏராளமான செலவு செய்து கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

u காசாவின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து 100 நாட்கள் நெருங்குகின்றன. ஆனால் இதுவரை இஸ்ரேல் தனது இலக்கில் வெற்றிபெற முடியவில்லை எனவும் பாலஸ்தீன போராளி குழுக்கள் இன்னும் வலுவாக களத்தில் உள்ளன எனவும் ஈரான் தலைவர் சையத் கமேனி கூறியுள்ளார்.

u ஏமனின் ஹவுதி அமைப்பினர் செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் ஜப்பானும் கூட்டாக முன்வைத்தன. 15 பேரில் 11 பேர் ஆதரித்தனர். சீனா/ ரஷ்யா/ மொசாம்பிக்/ அல்ஜீரியா ஆதரிக்காமல் நடுநிலை வகித்தன. காசவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்தான் ஹவுதி தாக்குதலுக்கு காரணம் எனும் ரஷ்யாவின் திருத்தம் நிராகரிக்கப்பட்டது. காசா தாக்குதலை நிறுத்த தேசங்களை திரட்டாத அமெரிக்கா, இஸ்ரேலின் சரக்கு போக்குவரத்தை காக்க ஐ.நா.வை பயன்படுத்துகிறது. இஸ்ரேல் கப்பல்கள் மட்டுமே எங்களுக்கு பிரச்சனை;மற்ற கப்பல்களை நாங்கள் தாக்குவது இல்லை; எங்கள் மீது யார் தாக்கினாலும் பதிலடி உண்டு என ஹவுதி அமைப்பு மீண்டும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பெரும் பலம் வாய்ந்த ராணுவமா? ஹவுதியின் உணர்வுப்பூர்வ பதிலடியா? எது வெல்லும் என்பது வரும் நாட்களில் தெரியும்.

uகாசாவுக்கு அனுப்ப வேண்டிய உதவிப் பொருட்கள் 6ஆவது தடவையாக இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டது என உலக
சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. செஞ்சிலு வை சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஒன்றை இஸ்ரேல் தாக்கியதில் 4 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

u மொராக்கோ இஸ்ரேலுடன் உள்ள ராஜிய உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. 2021இல் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மற்றும் சில சலுகைகள் காரணமாக இஸ்லாமிய நாடான மொரக்கோ இஸ்ரேலை அங்கீகரித்து உறவை ஏற்படுத்திக் கொண்டது.

u 77 பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் காசாவில் இனப்படுகொலையை தடுக்க தவறியதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்/ வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன்/ ராணுவ அமைச்சர்லாயிட் ஆஸ்டின் ஆகியோர் மீது வழக்கு தொடுத்துள்ளன.

u பாலஸ்தீன ஆதரவு ஆயிரக்கணக்கான கணக்குகளை சமூக ஊடகம் எக்ஸ் நிறுவனம் முடக்கியது. பின்னர் இந்த கணக்குகள் மீட்கப்பட்டாலும் ஏன் முடக்கப்பட்டன என்பதை எக்ஸ் நிறுவனம் விளக்கவில்லை. பெரிய சமூக ஊடகங்கள்மேற்கத்திய நாடுகளுக்கு தலையாட்டுபவை யாகவே உள்ளன.

u ஹவுதி அமைப்புக்கு எதிராக ஏமன் நாட்டில் உள்ள 12 ராணுவத் தளங்கள் மீது அமெரிக்க-பிரிட்டன் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதற்கு கனடா/ நெதர்லாந்து/ ஆஸ்திரேலியா மட்டுமல்லாது பகரைனும் ஆதரித்துள்ளது என ஜோ பைடனும் ரிஷி சுனாக்கும் கூறியுள்ளனர். ஏமன் ஒரு சுயேச்சையான நாடு என்பதையும் மீறி அந்த நாட்டுக்குள் சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் தாக்குதல்கள் நடத்த தயங்க மாட்டோம் என ஜோ பைடன் கொக்கரித்துள்ளார்.

u நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் இப்படி போரில் அமெரிக்கா நேரிடையாக தலையிடுவது சட்ட விரோதமானது என ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

u இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க அவசர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்  கூட்டத்துக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.

u இந்த தாக்குதல்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன என ஏமன் அண்டை நாடான சவூதி அரேபியா அச்சம் தெரிவித்துள்ளது. ஏமனுடன் தான் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கை சிதைந்துவிடுமோ என்பது சவூதியின் அச்சம்!
u இந்த தாக்குதலை நடத்தியதன் மூலம் அமெரிக்கா

வும் பிரிட்டனும் பெரும் தவறுகள் செய்துவிட்டன; இதன் விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீர வேண்டும் என ஏமன் எச்சரித்துள்ளது. போர் பரவுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும். இஸ்ரேலுக்காக அரேபிய பகுதியில் ஒரு பெரும் போரை உருவாக்க அமெரிக்கா முன்வந்துள்ளது என்பது இஸ்ரேலின் மீது அமெரிக்காவின் “தீராக்காதலை” வெளிப்படுத்துகிறது. 

u மேற்கண்ட வரைபடம் ஏமன் நாட்டுக்குள் அமெரிக்கா பிரிட்டன் விமானங்கள் நடத்திய தாக்குதல் இலக்குகளை சுட்டிக்காட்டுகிறது. 

u ஏமன் மீது தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

u ஏமன் மீது அமெரிக்கா பிரிட்டன் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் தாங்கள் பங்கேற்க வில்லை என பிரான்சு தெரிவித்துள்ளது. 

u போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு தொடர்பான இஸ்ரேலுக்கு எதிரான வழக்கின் முதல்நாள் விசாரணையில் சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கறிஞர்கள் தமது வாதத்தை முடித்தனர். மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வாதங்கள் இருந்தன என பல சர்வதேச சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 12ஆம் தேதி இஸ்ரேல் தனது வாதத்தை முன்வைக்கிறது. 

u காசாவில் முதல் 60 நாட்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சு 1,50,000 டன் நிலக்கரி எரித்ததற்கு சமமான கரியமில வாயு உற்பத்தி செய்யப்பட்டதாக சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கால கட்டத்தில் இயற்கை அன்னை மீது செலுத்தப்பட்ட கரியமிலவாயுவில் 99% இஸ்ரேலின் குண்டு வீச்சின் விளைவு எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் குண்டுவீச்சு இன அழிப்பு மட்டுமல்ல; இயற்கை அழிவும் கூட!

அ.அன்வர் உசேன்