மத்திய கசவில் உள்ள ஐநா பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய காசாவின் நஸ்ரேத் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா நடத்தும் பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அக்டோபர் 7-ஆம் தேதி முதல் காசா மீதான இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 36,654 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 83,309 பேர் காயமடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 68 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 235 பேர் காயமடைந்ததாகவும் என்கிளேவ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.