பாகிஸ்தான் நாடாளு மன்றத்திற்கு பிப்ரவரி 8 அன்று தேர்தல் நடை பெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 9 வெள்ளியன்று துவங்கியது.
இதில், வெள்ளிக்கிழ மை மாலை 6.30 மணி நிலவரப்படி இம்ரான்கா னின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மற்றும் அதன் ஆதர வில் களமிறங்கிய சுயேச்சை வேட்பாளர்கள் 62 தொகு திகள் வரை வெற்றிபெற்று முன்னிலை வகித்தனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), 46 தொகுதிகளி லும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 39 தொகுதி களிலும் வெற்றி பெற்றுள் ளன.
மற்றவர்கள் 9 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தனர். பாகிஸ்தானில் மொத்த முள்ள 266 மக்களவை தொகு தியில் 255 தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 133 இடங்கள் தேவைப்படும் நிலையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளது.
இதனால் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் கட்சியில் இணைக்க 3 கட்சிகளும் போட்டியில் இறங்கியுள்ளன. குறிப்பாக, இந்த முயற்சியில் இரண்டாம் இடத்தில் உள்ள நவாஸ் ஷெரீப்பின் கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.