world

img

கியூபா மீது கை வைக்காதே! ஐரோப்பிய யூனியன்-செலாக் உச்சிமாநாடு வலியுறுத்தல்

பிரஸ்ஸல்ஸ், ஜூலை 19- கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும், அந்நாட்டின் பெயரை பயங்கரவாதி களுக்கு ஆதரவு தரும் நாடு என்று பட்டியலில் இணைத்திருப்பதையும் நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் மற்றும் செலாக் உச்சி மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியன் மற்றும்  தென் அமெரிக்க-கரீபிய நாடுகளின் கூட்டமைப்பு (செலாக்) உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்றது. பெரும் பாலான நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். இரு தரப்பின ருக்கும் இடையிலான பிரச்சனைகள் மட்டுமில்லாமல், உலகைப் பாதி க்கும் பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதித்திருக்கிறார்கள். மாநாட்டின் நிறைவு நாளன்று, கியூபா மீதான சட்டவிரோத பொரு ளாதார, வர்த்தகத் தடைகளுக்கு எதிராகப் பொதுக்கருத்து உரு வானது. அந்தத் தடைகளை நீக்க  வேண்டும் என்று தீர்மானம் இயற்று வதற்குப் பலத்த ஆதரவு தலைவர் களிடம் இருந்தது. மேலும் பயங்கர வாதத்திற்கு ஆதரவு தரும் நாடு களின் பட்டியலிலும் இருந்து கியூபா வின் பெயரை நீக்க வேண்டும் என்பதையும் சேர்த்து தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

உச்சிமாநாட்டில் பங்கேற்ற கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ்-கானெல், “தடைகளுக்கும், தன்னிச்சையான முறையில் பயங்கர வாத ஆதரவுப் பட்டியலில் தங்களை  இணைத்ததற்கும் எதிராக உறுதி யான நிலைப்பாட்டை எடுத்ததற்காக ஐரோப்பிய யூனியன் மற்றும் செலாக் நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தையே நாங்கள் விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார். அர்ஜெண்டினாவுக்கும், பிரிட்ட னுக்கும் இடையில் மால்வினாஸ்/ஃபாக்லாந்து தீவுகள் தொடர்பான பிரச்சனை குறித்தும் மாநாட்டில் விவாதித்திருக்கிறார்கள். முதன் முறையாக இது குறித்து தீர்மான மும் நிறைவேறியுள்ளது. பிரச்சனை களை சர்வதேச சட்டங்களின் அடிப் படையில் பேசித் தீர்க்க வேண்டும் என்ற செலாக் நாடுகளின் கருத்தை இந்த உச்சிமாநாடு அங்கீகரிக்கிறது என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது. முதலீடுகள் அதிகரிப்பு உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் வர்த்தக மற்றும் தொழில்துறைகளில் உள்ள உறவுகளை விரிவுபடுத்துவதும் ஒன்றாகும். இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கு முதலீடுகள் வருவது தடையாக இருக்கிறது. அமெரிக்கா வின் தலையீடும் இதற்கு ஒரு காரண மாகும். அந்தத் தடைகளை உடைக்கும் வகையில் முதல் கட்ட மாக 5 ஆயிரம் கோடி யூரோக்களை  தென் அமெரிக்க நாடுகளில் முதலீடு செய்வோம் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருக்கிறது.

61 நாடுகள்

ஐரோப்பிய யூனியன் மற்றும் லத்தீன்-அமெரிக்க-கரீபிய நாடுகளின் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மாநாடு என்பதால் இதில் மொத்தம் 61 நாடுகள் பங்கேற்றுள்ளன. அண்மைக்காலங்களில் புதிய சர்வதேச உறவுகள் உருவாகி வரும் வேளையில் இந்த 61 நாடுகளின் இணைப்பும் மிகவும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இந்த இணைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று பங்கேற்ற நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.