world

img

இலங்கை அதிபராக அனுர குமார திஸாநாயக்க பதவியேற்பு!

 கொழும்பு,செப்.23- இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது அதிபராக இன்று பதவியேற்றார்.
இலங்கை அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமையன்று(23.09.2024) அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வலது சாரி அமைப்புகள் படுதோல்வியடைந்த நிலையில் முதல்முறையாகத்  இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க 42.31% வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். 
நேற்று இரவு அனுர குமார திஸாநாயக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக இலங்கையின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கையின் 9ஆவது அதிபராக அனுர குமார திஸாநாயக்க இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமையில் பதவியேற்றுக்கொண்டார்