இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் நள்ளிரவு 2.18 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 80 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.